தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

புதைகிறது குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடம் : அரசு அதிகாரிகள் கடும் அதிர்ச்சி

Go down

புதைகிறது குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடம் : அரசு அதிகாரிகள் கடும் அதிர்ச்சி Empty புதைகிறது குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடம் : அரசு அதிகாரிகள் கடும் அதிர்ச்சி

Post by aarul Sun Apr 04, 2010 11:06 pm

//புதைகிறது குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடம் : அரசு அதிகாரிகள் கடும் அதிர்ச்சி





கோவை
: அரசு சார்பில் கோவை அம்மன் குளத்தில் கட்டிய அடுக்குமாடி கட்டடம்,
கட்டுமானப்பணி பெரும்பகுதி முடிந்த நிலையில், மண்ணில் புதைய துவங்கியது,
அரசு அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத்
திட்டப்படி, கோவை மாநகரில் ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரும் பணி
நடக்கிறது. உக்கடத்தில் 2,904 வீடுகளும், அம்மன் குளத்தில் 936 வீடுகளும்,
118 கோடி ரூபாயில் கட்டப்படுகின்றன. கடந்த 1989ல் வருவாய்த்துறையால்
நத்தம் புறம்போக்காக மாற்றப்பட்ட அம்மன் குளம், இப்போது மழை பெய்தாலும்
வெள்ளக்காடாக மாறி விடும். ஒரு காலத்தில், தண்ணீர் நிரம்பியிருந்த
குளத்தில், சிறிது சிறிதாக ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டன. அதை பயன்படுத்தி,
அரசும் குளத்தை மேடாக்கி, கட்டடம் கட்டும் வேலையை துவக்கியது. அம்மன்
குளத்தில், முதலில் 44 கோடி ரூபாய் மதிப்பில் 1,608 வீடு கட்ட முடிவானது.
ஆனால், மொத்தமுள்ள 15 ஏக்கரில், ஏழு ஏக்கரை மட்டுமே காலி செய்ய
முடிந்ததால், 936 வீடுகள் மட்டுமே கட்டப்படுகின்றன; மீதமுள்ள 672 வீடுகள்,
உக்கடம் பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டன. அம்மன் குளத்தில், தரை தளம்
மற்றும் மூன்று தளங்களுடன் 18 அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்ட பணி
நடந்து வருகிறது. ஈரோட்டைச் சேர்ந்த 'எஸ்.பி.சுந்தரசாமி அன் கோ' என்ற
நிறுவனம், பணி மேற்கொள்கிறது.

கடந்த ஆகஸ்ட்டில் துவங்கிய இந்த பணியை, வரும்
ஜூனுக்குள் முடிப்பது அரசின் திட்டம். செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக,
இந்த வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற காரணத்தால், இரு
இடங்களிலும் பணிகள் அதி தீவிரமாக நடக்கின்றன. கட்டுமானப் பணி முடிந்து
விட்டது, பூச்சு, உள் அலங்கார வேலை மட்டுமே மிச்சமிருக்கின்றன.
இந்நிலையில், அம்மன்குளத்தில் கட்டப்படும் 18 அடுக்கு மாடிக்
குடியிருப்புகளில், இரண்டு கட்டடங்கள் லேசாக சாய்ந்திருப்பதை, அப்பகுதி
மக்கள் நேற்று பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தனர். நேற்று முன் தினமே,
இந்த கட்டடத்தில் வேலை பார்த்த சிலர், கட்டடம் ஆடுவதை உணர்ந்துள்ளனர்.
நேற்று காலையில் அந்தத் தகவல் பரவியதும், அங்கு பெரும் கூட்டம் கூடியது.
அரசு கட்டிய அடுக்குமாடி கட்டடம் சாய்வதை அறிந்து, மக்கள் ஆவேசம் அடைவதை
கண்டதும், அங்கு பணியிலிருந்து குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் நகர்ந்து
விட்டனர். போலீசார் அங்கு குவிந்தனர். ஒலி பெருக்கியில், 'எல்லோரும் அந்த
இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்' என்று எச்சரித்தனர். வேடிக்கை பார்க்க
வந்த மக்கள் கூட்டத்தைத் துரத்தினர்.

சிறிது நேரத்தில் மாநகராட்சி கமிஷனர் அன்சுல்
மிஸ்ரா, இன்ஜினியர்கள் பூபதி, லட்சுமணன், சுகுமார் வந்தனர். சாய்ந்த
கட்டடத்தையும், சாயாத கட்டடத்தையும் கயிற்றால் அளந்து, இரு கட்டடங்களும்
ஒன்று முதல் ஒன்றரை அடி வரை, மண்ணில் புதைந்திருப்பதை அவர்கள்
கண்டறிந்தனர். அவர்கள் இருக்கும்போதே, கலெக்டர் உமாநாத் அங்கு வந்தார்.
அவரும், இரு கட்டடங்களையும் பார்த்து விட்டு, 'இதை இடிக்காமல் காப்பாற்ற
வழி இருக்கிறதா' என்று கேட்க, 'வாய்ப்பில்லை' என்று மாநகராட்சி
இன்ஜினியர்கள் கூறினர். அவர்களைத் தொடர்ந்து, அங்கு வந்த அமைச்சர்
பழனிச்சாமியும், கட்டடம் சாய்ந்திருப்பதை உறுதி செய்தார்.

அவர் கூறுகையில், ''எனது தொகுதிக்குட்பட்ட
அம்மன் குளத்தில், ஜவஹர்லால் நேரு தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில்
கட்டிய கட்டடம், அரை மீட்டர் அளவுக்கு சாய்ந்திருப்பதாகத் தகவல் வந்தது.
இப்போது பார்த்ததில் தலா 24 வீடுகள் கொண்ட 2 'பிளாக்' கட்டடங்கள்
சாய்ந்துள்ளன. அவற்றை இடித்து விட்டு, மீண்டும் மண் பரிசோதனை செய்து,
பாதுகாப்பான இடத்தில் இந்த வீடுகள் கட்டப்படும்,'' என்றார். செம்மொழி
மாநாட்டுக்கு முன்பாக, இந்த வீடுகளைக் கட்டி முடித்து, பயனாளிகள் வசம்
ஒப்படைக்க அரசு முடிவு செய்திருந்த நிலையில், திடீரென இந்த கட்டடங்கள்
மண்ணில் புதைந்திருப்பது, மக்களிடம் மட்டுமின்றி, அதிகாரிகளையும்
அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

மண் பரிசோதனை செய்தோம்!
'நீர் நிலை இருந்த பகுதிகளில் அடுக்கு மாடிகளைக் கட்டக்கூடாது' என்று
சுற்றுச்சூழல் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், இதை
அரசும், மக்களும் ஏற்பதில்லை. அதன் விளைவாக, இப்போது இந்த பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. ஒரு வேளை, இந்த வீடுகள் கட்டி முடித்து, பயனாளிகளிடம்
ஒப்படைத்த பின், ஏதாவது விபரீதம் நடந்திருந்தால், உயிர் பலி ஏற்பட்டிருக்க
வாய்ப்புண்டு. இவ்வளவு பெரிய கட்டடம் கட்டுவதற்கு முன்பாக, மண் பரிசோதனை
செய்யப்பட்டிருக்க வேண்டும். 'அந்த சோதனை சரியாக செய்யப்பட்டதா' என்று
தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாகப் பொறியாளர் கோபியிடம் கேட்டபோது,
''முறைப்படி மண் பரிசோதனை செய்து, கட்டடம் கட்ட ஏற்ற பகுதி என்று தெரிந்த
பின்பே, பணியைத் துவக்கினோம். அது மட்டுமின்றி, மூன்றரை மீட்டர்
ஆழத்துக்கு அஸ்திவாரமும் போடப்பட்டுள்ளது. திடீரென கட்டடம் இறங்குவது
எங்களுக்கே புரியாத புதிராகவுள்ளது,'' என்றார்.

இன்று மீண்டும் ஆய்வு? 'மண்
பரிசோதனை ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது' என்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய
அதிகாரிகள் கூறினாலும், திடீரென இப்படி கட்டடம் இறங்கியிருப்பது, பெரும்
அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதனால், ஒரு கட்டடத்துக்கு 1.2 கோடி
வீதமாக, இரண்டு அடுக்கு மாடிக் குடியிருப்புக் கட்டடங்களை இடிக்க 2.4 கோடி
ரூபாய் வீணாகிறது. இதை ஒப்பந்ததாரர் ஏற்க வேண்டுமென்கிறார் அமைச்சரும்,
இந்த தொகுதி எம்.எல்.ஏ.வுமான பழனிச்சாமி. மண் பரிசோதனை செய்து கொடுத்த
அரசுத்துறை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவில்லை. 936
வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இன்று இந்த இடத்திலுள்ள மண்ணின்
தன்மையை அறிய சென்னை அண்ணா பல்கலையில் இருந்து நிபுணர்கள் குழு வருவதாக
கலெக்டர் உமாநாத் தெரிவித்தார். ஒரு வேளை, 'இந்த மண்ணுக்கு நான்கு மாடிக்
கட்டடத்தைத் தாங்கும் சக்தியில்லை' என்று அந்தக் குழுவினர் சொன்னால்,
இங்கு கட்டப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் இடிக்கப்படுமா என்ற கேள்வியும்
எழுகிறது. அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.

அங்கே பிரச்னை இல்லை; அமைச்சர்:
இந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக வசிக்கும் மக்கள், தங்கள் வாழும்
இடத்துக்குப் பட்டா வேண்டுமென்று கோருகின்றனர். ஆனால், ஒரு வீட்டுக்கு 2
லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவழித்து அரசு, இலவச வீடே கட்டித்தருகிறது.
பல லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடாக இருந்தாலும், 'பாதுகாப்பு இருக்குமா'
என்ற அச்சம், மக்களிடம் எழுந்துள்ளது. இதனால், மற்ற வீடுகளிலும் மக்கள்
குடியேறுவார்களா என்ற சந்தேகமும் கிளம்பி இருக்கிறது. அப்பகுதியைச்
சேர்ந்த ஜான்சிராணி (26) என்ற வக்கீல் கூறுகையில், ''எங்களுக்கு பட்டா
கொடுத்தால் போதும்; பாதுகாப்பற்ற வீடு தேவையில்லை,'' என்றார். மற்ற
வீடுகளில் மக்கள் குடியேற பயப்படுவது குறித்து, அமைச்சர் பழனிச்சாமியிடம்
கேட்டபோது, ''இந்த இரண்டு பிளாக் மட்டும் தான் பிரச்னை; மற்ற கட்டடங்களில்
பிரச்னையில்லை; இருப்பினும், எல்லாவற்றையும் நன்கு சோதித்த பின்பே,
மக்களிடம் ஒப்படைக்கப்படும்,'' என்றார்.

இதுதான் அந்த கட்டடம்!
ஜே.என்.என்.யு.ஆர்.எம். திட்டத்தில் ஓராண்டுக்கு முன்பே, கட்டத் துவங்கி
விட்ட இந்த வீடுகளைத்தான், செம்மொழி மாநாட்டுக்காக கோவையில் 3,840 வீடுகள்
கட்ட, முதல்வர் உத்தரவிட்டதாக அரசு தரப்பில் செய்தி வெளியிடப்பட்டது.
இதுபற்றி, சட்டசபையிலும் பிரச்னை கிளப்பப்பட்டது. செம்மொழி மாநாடுக்காக
இதைக் கட்டாவிட்டாலும், அதற்கு முன்பாக முடித்து, பயனாளிகளிடம்
ஒப்படைக்கலாம் என்று அரசு திட்டமிட்டிருந்தது. இந்த சூழலில், கட்டடம்
மண்ணுக்குள் புதைந்து வருவது அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
aarul
aarul
தள ஆலோசகர்
தள ஆலோசகர்

பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum