தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

இனி ஐ.ஏ.எஸ். தேர்வை தமிழில் எழுத முடியாது: தமிழக மாணவர்கள் கொதிப்பு!

Go down

இனி ஐ.ஏ.எஸ். தேர்வை தமிழில் எழுத முடியாது: தமிழக மாணவர்கள் கொதிப்பு! Empty இனி ஐ.ஏ.எஸ். தேர்வை தமிழில் எழுத முடியாது: தமிழக மாணவர்கள் கொதிப்பு!

Post by மகி Mon Mar 11, 2013 3:49 pm

ஐ.ஏ.எஸ். தேர்வை இனி தமிழ் மொழியில் எழுத முடியாது.

இது குறித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஆணையில் கூறியிருப்பதாவது,

ஐ.ஏ.எஸ். முதன்மை (மெயின்) தேர்வில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதன்மை தேர்வு எழுதுவதிலும், விருப்பப் பாடங்களைக் குறைத்து பொது அறிவு மற்றும் பொதுப்பாடங்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முதன்மைப் பாடத் தேர்வு எழுதுவோரில் குறைந்தபட்சம் 25 பேர் ஒரு மொழியில் தகுதி பெற்றிருந்தால் மட்டுமே அந்தப் பிராந்திய மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்படும். ஆனால் இது இந்தி அல்லது ஆங்கிலத்துக்குப் பொருந்தாது. அதே போன்று பட்ட வகுப்பில் மாணவர்கள் படித்த மொழி வழியாக மட்டுமே முதன்மைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பிராந்திய மொழிகளில் முதன்மைத் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்று கூறப்படுகிறது. மேலும் தமிழ் இலக்கியம் படித்தவர்கள் மட்டும் தான் தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடகமாகத் தேர்வு செய்ய முடியும் என்றும் புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் தமிழில் தேர்வு எழுதிய 10க்கும் மேற்பட்டோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டனர். ஆண்டு தோறும் முதல் கட்டத் தேர்வுக்கு பிறகு நடக்கும் பிரதான தேர்வை தமிழகத்தில் மட்டும் 300-600 பேர் எழுதுகின்றனர். இந்நிலையில் பட்டப்படிப்பில் தமிழ் வழியில் படிப்போர் மட்டுமே தமிழில் தேர்வு எழுதலாம் என்ற விதியால் ஒரு சில மாணவர்கள் மட்டுமே தமிழில் தேர்வு எழுத முடியும். இந்த புதிய விதிமுறைகளுக்கு ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த புதிய விதிமுறைகள் இந்தி மற்றும் ஆங்கிலம் பேசும் மாணவர்களுக்கு பொருந்தாது என்பதில் இருந்தே மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்தி பேசாத மாநிலங்கள் மீது மறைமுக இந்தி திணிப்பில் ஈடுபடுகிறது என்று சில மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

இது குறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் இயக்குநர் சங்கர் கூறுகையில்,

இந்த புதிய விதிமுறைகளால் நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ். ஆக முடியும். முதன்மை தேர்வில் இருந்த 2 விருப்பப் பாடங்கள் ஒன்றாக குறைக்கப்பட்டதும், அதற்கு பதில் பொதுப் பாடங்கள் இரண்டாக அதிகரிக்கப்பட்டதும் வரவேற்கத்தக்கது. ஆனால் மாநில மொழிகளில் தேர்வு எழுதக் கூடாது என்பதை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேறு வார்த்தையில் கூறியுள்ளது. இந்த விதிகள் கிராமப்புற மற்றும் ஆங்கிலம் தெரியாத மாணவர்களுக்கு எதிராக உள்ளன என்றார்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய விதிமுறைகளுக்கு ராமதாஸ் கண்டனம்: ஐ.ஏ.எஸ். தேர்வுகளை இனி தமிழில் எழுத முடியாமல் விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தேசிய அளவில் நடைபெறும் அனைத்து போட்டித்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 5ம் தேதி மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அரசிதழில் இளநிலை பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்தவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான முதன்மை (மெயின்) தேர்வை தமிழில் எழுத முடியும் என்றும், தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக தேர்வு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தமிழ் உள்ளிட்ட மாநில மொழி பேசும் மக்களுக்கு இழைக்கப்பட்ட மிகப் பெரிய துரோகம் ஆகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் இந்தி மொழிக்கு அடுத்தபடியாக தமிழ் மொழியில்தான் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வு எழுதி வந்தனர். 2009ம் ஆண்டில் 622 பேரும், 2010ம் ஆண்டில் 561 பேரும், தமிழில் தேர்வு எழுதினர். தமிழ் இலக்கியம் படிக்காமல் மருத்துவம், பொறியியல் படித்த மாணவர்கள் கூட தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுத்து தமிழிலேயே முதன்மை தேர்வுகளை எழுதி அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று வந்தனர். கடந்த ஆண்டு தமிழ் இலக்கியத்தை விருப்பப்பாடமாக எடுத்து தேர்வு எழுதியவர்களில் 19.4 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் யாரிடமும் கருத்து கேட்காமல் மாநில மொழிகளில் குடிமை பணி தேர்வுகளை எழுத தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு இந்தி பேசுபவர்களைத் தவிர வேறு எவரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக வந்துவிடக் கூடாது என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைப்பதுதான் காரணமாகும்.

இதற்காகவே மிகவும் தந்திரமாக விதிகளை வகுத்து மாநில மொழி பேசும் மக்களின் உரிமைகளை மத்திய அரசு பறித்துக் கொண்டிருக்கிறது. இந்தி பேசுபவர்களுக்கு மட்டும்தான் அனைத்து சலுகைகளும் என்றால் இந்த நாடு இந்திய தேசமா? அல்லது இந்தி தேசமா? என்ற வினா எழுகிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள்களையும் தமிழில் தயாரிக்க வேண்டும் என்று ஏற்கனவே நான் வலியுறுத்தியுள்ளேன். கடந்த ஜூன் 26ம் தேதி தேதி சென்னையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்திலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நேரத்தில் இருக்கும் முக்கியத்துவத்தையும் பறிக்கும் மத்திய அரசின் செயல், மேல் ஆடை கேட்பவனின் கீழ் ஆடையையும் பறிப்பதற்கு ஒப்பானதாகும்.

மாநில மொழி மக்களுக்கு எதிரான அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற்று ஏற்கனவே இருந்தவாறு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதன்மை தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் எழுதலாம் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மே 26ம் தேதியன்று குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறும் மையங்கள் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

நன்றி: tamil.oneindia.in.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» இணைய இணைப்பே இன்றி தமிழில் எழுத இங்கே படிக்கவும்....
» பிஎச்இஎல் தேர்வு-ஹைதராபாத்தில் தமிழக மாணவர்கள் விரட்டியடிப்பு!
» நான் சிவிலியன் இராணுவம் என்னை விசாரிக்க முடியாது - பொன்சேகா வாக்கு மூலம் கொடுக்க மறுப்பு
» கோவை சட்டக் கல்லுரி மற்றும் அரசு கலைக்கல்லுரி மாணவர்கள்
»  bye டாட்டா ...22nd 23rd ரெண்டு நாள் உங்கள எல்லாம் நான் பாக்க முடியாது ....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum