Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தாக்குதல்!
2 posters
Page 1 of 1
மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தாக்குதல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் உ.ரா.வரதராஜன் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று மக்கள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதை தொடர்ந்து அந்த அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அடித்து நொறுக்கினர். இந்த நிகழ்வில் அலுவலக ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் உ.ரா.வரதராஜன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது மரணம் குறித்து நேற்று மக்கள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
அதில், ''வரதராஜன் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் இந்த தகவல் உறுதியாகி உள்ளது'' என்றும் செய்தி வெளியானது.
அவர் கடத்தி செல்லப்பட்டு, கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு, பின்னர் ஏரியில் பிணம் வீசப்பட்டு இருக்கலாம் என்றும் அந்த தொலைக்காட்சி செய்தியில் சந்தேகம் எழுப்பப்பட்டது.
ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ள காவல்துறை, வரதராஜனின் வயிற்றுக்குள் தண்ணீர் இருந்தது பிரேத பரிசோதனையின் ஆரம்ப கட்ட விசாரணையில் உறுதிபட தெரிய வந்துள்ளது என்றும், கொலை செய்யப்பட்டு தண்ணீரில் வீசப்பட்டால், வயிற்றுக்குள் ஏரி தண்ணீர் போக வாய்ப்பு இல்லை என்றும், மேலும் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை இன்னும் வரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இறுதி அறிக்கை வந்த பிறகுதான், இது பற்றி சொல்ல முடியும் என்றும் காவல்துறையினர் கூறினர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 300க்கும் மேற்பட்டோர் இன்று மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தில் புகுந்து கடும் தாக்குதல் நடத்தினர்.
இதில் கண்ணாடிகள், ஒளிபரப்பு சாதனங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அடித்து நொறுக்கினர். அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலில் அலுவலக ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 300 பேரை கைது செய்தனர்.
நன்றி: வெப்துனியா.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் உ.ரா.வரதராஜன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவரது மரணம் குறித்து நேற்று மக்கள் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
அதில், ''வரதராஜன் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் இந்த தகவல் உறுதியாகி உள்ளது'' என்றும் செய்தி வெளியானது.
அவர் கடத்தி செல்லப்பட்டு, கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டு, பின்னர் ஏரியில் பிணம் வீசப்பட்டு இருக்கலாம் என்றும் அந்த தொலைக்காட்சி செய்தியில் சந்தேகம் எழுப்பப்பட்டது.
ஆனால் இந்த செய்தியை மறுத்துள்ள காவல்துறை, வரதராஜனின் வயிற்றுக்குள் தண்ணீர் இருந்தது பிரேத பரிசோதனையின் ஆரம்ப கட்ட விசாரணையில் உறுதிபட தெரிய வந்துள்ளது என்றும், கொலை செய்யப்பட்டு தண்ணீரில் வீசப்பட்டால், வயிற்றுக்குள் ஏரி தண்ணீர் போக வாய்ப்பு இல்லை என்றும், மேலும் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கை இன்னும் வரவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இறுதி அறிக்கை வந்த பிறகுதான், இது பற்றி சொல்ல முடியும் என்றும் காவல்துறையினர் கூறினர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 300க்கும் மேற்பட்டோர் இன்று மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தில் புகுந்து கடும் தாக்குதல் நடத்தினர்.
இதில் கண்ணாடிகள், ஒளிபரப்பு சாதனங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அடித்து நொறுக்கினர். அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலில் அலுவலக ஊழியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் காவல்துறையினர் விரைந்து வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 300 பேரை கைது செய்தனர்.
நன்றி: வெப்துனியா.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: மக்கள் தொலைக்காட்சி அலுவலகம் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தாக்குதல்!
சென்னை
: மார்க்சிஸ்ட் தலைவர் வரதராஜன் மரணம் குறித்து வெளியான செய்தியால்,
மக்கள் "டிவி' அலுவலகம் மீது, மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் கல் வீசி
தாக்கினர். இதையடுத்து, மா.கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பா.ம.க.,வினர்
அடித்து நொறுக்கினர். இச் சம்பவம், சென்னையில் நேற்று பரபரப்பை
ஏற்படுத்தியது.
மார்க்சிஸ்ட்
தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.ஆர்.வரதராஜன், ஏரியில் குதித்து தற்கொலை
செய்து கொண்டிருப்பது தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
வரதராஜன் தற்கொலை செய்து கொள்ளவில்லை; கொலை செய்யப்பட்டுள்ளார் என மக்கள்
"டிவி'யில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இச்செய்தி தவறானது என
மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற் காக சென்னை
நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள மக்கள் "டிவி' அலுவலகம் முன்,
ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். நேற்று காலை 11 மணிக்கு மார்க்சிஸ்ட்
கட்சி தென் சென்னை மாவட்டச் செயலர் சண்முகம், வடசென்னை மாவட் டச் செயலர்
பீமா ராவ், மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உட்பட 100க்கும் மேற்
பட்டோர், மக்கள் "டிவி' அலுவலகம் முன் கூடினர். அப்போது திடீரென
மார்க்சிஸ்ட் கட்சியினர், மக்கள் "டிவி' அலுவலகம் மீது கல் வீசி
தாக்கினர். "டிவி' அலுவலக கண்ணாடிகள் நொறுக்கின. அலுவலகத் திற்கு
உள்ளேயும் செங்கற்கள் விழுந்ததில், மக்கள் "டிவி' ஊழியர்கள் காயமடைந்தனர்.
மக்கள்
"டிவி' இணை ஆசிரியர் பாஸ்கர சந்திரன், நுங்கம் பாக்கம் போலீசில் கொடுத்த
புகாரின் பேரில் சண்முகம், பீமா ராவ், பாலகிருஷ்ணன் உட்பட 101 பேர் கைது
செய்யப்பட்டனர். மக்கள் "டிவி' அலுவலகம் தாக் கப்பட்ட தகவலறிந்த பா.ம.க.,
வினர் சிலர், சென்னை தி.நகர் வைத்தியநாத தெருவில் உள்ள மா.கம்யூனிஸ்ட்
கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு, இரண்டு கார், மூன்று பைக்
மற்றும் அலுவலக கண்ணாடிகளை பா.ம.க.,வினர் அடித்து நொறுக்கினர்.
மார்க்சிஸ்ட் கொடிக் கம்பம் உடைக்கப்பட்டதுடன், மார்க்சிஸ்ட் தலைவர்
ராமமூர்த்தியின் படமும் உடைக் கப்பட்டது. மா.கம்யூனிஸ்ட் அலுவலகம் உள்ள
தெருவில், பா.ம.க., கொடியுடன் ஒரு கார் வந்தது. அந்த காரில் பா.ம.க.,
இளைஞர் அணி துணைத் தலைவர் குமார் இருந்தார். ஆத்திரமடைந்த மார்க் சிஸ்ட்
தொண்டர்கள், அவரை விரட்டிச் சென்றனர். அவர்களை தடுத்து சமாதானப் படுத்திய
போலீசார், குமாரை கைது செய்தனர். குமார், பா.ம.க., கவுன்சிலர் வெங்கடேஷ்
உட்பட 14 பா.ம.க., வினரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு பா.ம.க.,
கவுன்சிலர் பிரகாசை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மார்க்சிஸ்ட்
மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: வரதராஜன் மரணம்
குறித்த செய்தி தொடர்பாக விளக்கம் கேட்பதற்காக, மக்கள் "டிவி' ஆசிரியரை
சந்திக்க மார்க்சிஸ்ட் தொண்டர்கள் சென்றனர். அப் போது, மக்கள் "டிவி'
அலுவலகத்திற்குள் இருந்து தான் மார்க் சிஸ்ட் கட்சியினர் மீது கற்கள்
வீசப்பட்டன. மறைந்த தலைவர் வரதராஜன் இறுதி நிகழ்ச்சிகள் நடந்து 10 நாட்கள்
கடந்துவிட்ட பின், இன்னும் அரசு மற்றும் போலீஸ் தரப்பில் பிரேத பரிசோதனை
முடிவுகள் வரவில்லை. பா.ம.க., கவுன்சிலர் பிரகாஷ் தலைமையில் 50 பேர்
அடியாட்களுடன் வந்து, எங்கள் அலுவலகத்தை தாக்கினர். பா.ம.க.,வினர் மீது
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார்.
தாக்குதல்
சம்பவம் குறித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: மக்கள்
"டிவி' அலுவலகம் மீது, மா.கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள்
தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வன் முறை வெறியாட்டத்தில், அலுவலகம்
கடுமையாக சேதப்படுத் தப்பட்டுள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள்
அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் விலை உயர்ந்த ஒளிப்பதிவு
கருவிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு ஒளிப்பதிவாளர்கள், பெண்
ஊழியர்கள் உட்பட பல அலுவலக ஊழியர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். பத்திரிகை
சுதந்திரம், கருத்து சுதந்திரம் குறித்து மற்ற எல்லாரையும் விட
மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் மிக அதிகமாக பேசி வருகின்றனர். மேற்கு
வங்கத்தில் நடத்தி வரும் வன்முறை கலாசாரத்தை இன்று தமிழகத்திலும்
அரங்கேற்றி உள்ளனர்.
இந்த வன்முறை
வெறியாட் டத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். மறுப்பு அறிக்கை வெளியிட்டால்,
அதை உடனடியாக ஒளிபரப்பு செய்வதாக மக்கள் "டிவி' சார்பில் உறுதி அளிக்கப்
பட்டுள்ளது. சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, மக்கள் "டிவி' அலுவலகத்தை
தாக்கி, ஊழியர்களை காயப்படுத்தி, அலுவலகத்திற்கு பெரும் சேதத்தை
ஏற்படுத்தியவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க
வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
: மார்க்சிஸ்ட் தலைவர் வரதராஜன் மரணம் குறித்து வெளியான செய்தியால்,
மக்கள் "டிவி' அலுவலகம் மீது, மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் கல் வீசி
தாக்கினர். இதையடுத்து, மா.கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை பா.ம.க.,வினர்
அடித்து நொறுக்கினர். இச் சம்பவம், சென்னையில் நேற்று பரபரப்பை
ஏற்படுத்தியது.
மார்க்சிஸ்ட்
தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.ஆர்.வரதராஜன், ஏரியில் குதித்து தற்கொலை
செய்து கொண்டிருப்பது தெரிய வந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
வரதராஜன் தற்கொலை செய்து கொள்ளவில்லை; கொலை செய்யப்பட்டுள்ளார் என மக்கள்
"டிவி'யில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இச்செய்தி தவறானது என
மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற் காக சென்னை
நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள மக்கள் "டிவி' அலுவலகம் முன்,
ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். நேற்று காலை 11 மணிக்கு மார்க்சிஸ்ட்
கட்சி தென் சென்னை மாவட்டச் செயலர் சண்முகம், வடசென்னை மாவட் டச் செயலர்
பீமா ராவ், மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உட்பட 100க்கும் மேற்
பட்டோர், மக்கள் "டிவி' அலுவலகம் முன் கூடினர். அப்போது திடீரென
மார்க்சிஸ்ட் கட்சியினர், மக்கள் "டிவி' அலுவலகம் மீது கல் வீசி
தாக்கினர். "டிவி' அலுவலக கண்ணாடிகள் நொறுக்கின. அலுவலகத் திற்கு
உள்ளேயும் செங்கற்கள் விழுந்ததில், மக்கள் "டிவி' ஊழியர்கள் காயமடைந்தனர்.
மக்கள்
"டிவி' இணை ஆசிரியர் பாஸ்கர சந்திரன், நுங்கம் பாக்கம் போலீசில் கொடுத்த
புகாரின் பேரில் சண்முகம், பீமா ராவ், பாலகிருஷ்ணன் உட்பட 101 பேர் கைது
செய்யப்பட்டனர். மக்கள் "டிவி' அலுவலகம் தாக் கப்பட்ட தகவலறிந்த பா.ம.க.,
வினர் சிலர், சென்னை தி.நகர் வைத்தியநாத தெருவில் உள்ள மா.கம்யூனிஸ்ட்
கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு, இரண்டு கார், மூன்று பைக்
மற்றும் அலுவலக கண்ணாடிகளை பா.ம.க.,வினர் அடித்து நொறுக்கினர்.
மார்க்சிஸ்ட் கொடிக் கம்பம் உடைக்கப்பட்டதுடன், மார்க்சிஸ்ட் தலைவர்
ராமமூர்த்தியின் படமும் உடைக் கப்பட்டது. மா.கம்யூனிஸ்ட் அலுவலகம் உள்ள
தெருவில், பா.ம.க., கொடியுடன் ஒரு கார் வந்தது. அந்த காரில் பா.ம.க.,
இளைஞர் அணி துணைத் தலைவர் குமார் இருந்தார். ஆத்திரமடைந்த மார்க் சிஸ்ட்
தொண்டர்கள், அவரை விரட்டிச் சென்றனர். அவர்களை தடுத்து சமாதானப் படுத்திய
போலீசார், குமாரை கைது செய்தனர். குமார், பா.ம.க., கவுன்சிலர் வெங்கடேஷ்
உட்பட 14 பா.ம.க., வினரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு பா.ம.க.,
கவுன்சிலர் பிரகாசை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
மார்க்சிஸ்ட்
மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: வரதராஜன் மரணம்
குறித்த செய்தி தொடர்பாக விளக்கம் கேட்பதற்காக, மக்கள் "டிவி' ஆசிரியரை
சந்திக்க மார்க்சிஸ்ட் தொண்டர்கள் சென்றனர். அப் போது, மக்கள் "டிவி'
அலுவலகத்திற்குள் இருந்து தான் மார்க் சிஸ்ட் கட்சியினர் மீது கற்கள்
வீசப்பட்டன. மறைந்த தலைவர் வரதராஜன் இறுதி நிகழ்ச்சிகள் நடந்து 10 நாட்கள்
கடந்துவிட்ட பின், இன்னும் அரசு மற்றும் போலீஸ் தரப்பில் பிரேத பரிசோதனை
முடிவுகள் வரவில்லை. பா.ம.க., கவுன்சிலர் பிரகாஷ் தலைமையில் 50 பேர்
அடியாட்களுடன் வந்து, எங்கள் அலுவலகத்தை தாக்கினர். பா.ம.க.,வினர் மீது
கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார்.
தாக்குதல்
சம்பவம் குறித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: மக்கள்
"டிவி' அலுவலகம் மீது, மா.கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள்
தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வன் முறை வெறியாட்டத்தில், அலுவலகம்
கடுமையாக சேதப்படுத் தப்பட்டுள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள்
அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் விலை உயர்ந்த ஒளிப்பதிவு
கருவிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு ஒளிப்பதிவாளர்கள், பெண்
ஊழியர்கள் உட்பட பல அலுவலக ஊழியர்களும் படுகாயம் அடைந்துள்ளனர். பத்திரிகை
சுதந்திரம், கருத்து சுதந்திரம் குறித்து மற்ற எல்லாரையும் விட
மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் மிக அதிகமாக பேசி வருகின்றனர். மேற்கு
வங்கத்தில் நடத்தி வரும் வன்முறை கலாசாரத்தை இன்று தமிழகத்திலும்
அரங்கேற்றி உள்ளனர்.
இந்த வன்முறை
வெறியாட் டத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். மறுப்பு அறிக்கை வெளியிட்டால்,
அதை உடனடியாக ஒளிபரப்பு செய்வதாக மக்கள் "டிவி' சார்பில் உறுதி அளிக்கப்
பட்டுள்ளது. சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, மக்கள் "டிவி' அலுவலகத்தை
தாக்கி, ஊழியர்களை காயப்படுத்தி, அலுவலகத்திற்கு பெரும் சேதத்தை
ஏற்படுத்தியவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க
வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
aarul- தள ஆலோசகர்
- பதிவுகள் : 421
புள்ளிகள் : 793
Reputation : 12
சேர்ந்தது : 20/12/2009
வசிப்பிடம் : mani electronics,erode, tamilnadu,india
Similar topics
» மேற்கு வங்கத்தில் துணை ராணுவப் படை முகாம் மீது நக்ஸல்கள் தாக்குதல்: 24 வீரர்கள் பலி
» குவைத்தில் முதல் முறையாக "மக்கள் கருத்தரங்கம்"
» சத்தீஸ்கரில் நக்ஸல்கள் தாக்குதல்: 76 போலீஸார் பலி
» சுவிஸ் வங்கிகளின் ரகசியம்: பேணிக்காக்க மக்கள் ஆதரவு
» மக்கள் ஏத்துக் கிட்டாங்க
» குவைத்தில் முதல் முறையாக "மக்கள் கருத்தரங்கம்"
» சத்தீஸ்கரில் நக்ஸல்கள் தாக்குதல்: 76 போலீஸார் பலி
» சுவிஸ் வங்கிகளின் ரகசியம்: பேணிக்காக்க மக்கள் ஆதரவு
» மக்கள் ஏத்துக் கிட்டாங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|