Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இராby rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm
» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm
» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm
» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am
» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am
» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am
» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am
» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am
» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am
» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am
» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am
» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am
» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am
» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am
» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am
» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am
» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm
» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm
» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm
» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm
» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm
» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm
» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm
» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am
» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm
» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm
» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm
» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm
» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm
சமையல் குறிப்புகள்!
5 posters
Page 5 of 15
Page 5 of 15 • 1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15
Re: சமையல் குறிப்புகள்!
*காய்கறிகளை நறுக்கிய உடனேயே அவற்றை சமைக்க வேண்டும். அப்படி சமைக்காமல், வெகுநேரம் வைத்திருந்தால், காற்று பட்டு, அவற்றில் உள்ள அனைத்து சத்துக்களும் போய்விடும். சத்துக்கள் போன காய்கறிகளை உண்பதால் எந்த பலனும் இல்லை. எனவே, நறுக்கிய உடனே சமைத்துவிட வேண்டும்.
* காய்கறிகள் வாடிப் போய் விட்டால் கவலை வேண்டாம். பிரிஜ்ஜிலிருந்து ஜில்லென்ற தண்ணீரை எடுத்து, அதில், சில துளிகள் எலுமிச்சை சாற்றை சேர்த்து, அந்த தண்ணீரில் வாடிய காய்கறிகளைப் போட்டு வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து அவற்றை எடுத் தால், அப்போது தான் வாங்கியது போன்று புத்தம் புதிதாய் தோற்றமளிக்கும்.
* பச்சை குடைமிளகாய் சில நேரம் காரமாக இருக்கும். அந்த காரத்தை போக்குவதற்கு, விதைகளை நீக்கிவிட வேண்டும். பிறகு, அதை சாம்பாரில் போடவோ, கறியாக வதக்கவோ செய்யலாம். புளிச்சாறு அல்லது மோரில் ஊறவைத்து சமைத்தாலும், காரம் தணிந்து விடும்.
* சிலர் பாகற்காயை வெட்டிய பின் வேக வைத்து, அந்த தண்ணீரை கொட்டி விடுவர். இவ்வாறு செய்தால், பாகற்காயிலுள்ள சத்து வீணாகி விடும். அதற்கு பதில், பாகற்காயின் மேல் முள்ளை லேசாக நீக்கிவிட்டு, இரண்டாகப் பிளந்து, பாகற்காயின் உள்ளேயும், வெளியேயும் சிறிது உப்பையும், மஞ்சள் பொடியையும் தடவி அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பின், அதை கழுவி உபயோகித்தால், கசப்பு குறைந்திருக்கும்.
* சமையலுக்கு உபயோகிக்கும் பெருங்காயத்தை, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்த நீரை உபயோகித்தால், மணம் சீராக அமையும். பெருங்காயமும் குறைவாக செலவாகும்.
* காய்கறிகள் வாடிப் போய் விட்டால் கவலை வேண்டாம். பிரிஜ்ஜிலிருந்து ஜில்லென்ற தண்ணீரை எடுத்து, அதில், சில துளிகள் எலுமிச்சை சாற்றை சேர்த்து, அந்த தண்ணீரில் வாடிய காய்கறிகளைப் போட்டு வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து அவற்றை எடுத் தால், அப்போது தான் வாங்கியது போன்று புத்தம் புதிதாய் தோற்றமளிக்கும்.
* பச்சை குடைமிளகாய் சில நேரம் காரமாக இருக்கும். அந்த காரத்தை போக்குவதற்கு, விதைகளை நீக்கிவிட வேண்டும். பிறகு, அதை சாம்பாரில் போடவோ, கறியாக வதக்கவோ செய்யலாம். புளிச்சாறு அல்லது மோரில் ஊறவைத்து சமைத்தாலும், காரம் தணிந்து விடும்.
* சிலர் பாகற்காயை வெட்டிய பின் வேக வைத்து, அந்த தண்ணீரை கொட்டி விடுவர். இவ்வாறு செய்தால், பாகற்காயிலுள்ள சத்து வீணாகி விடும். அதற்கு பதில், பாகற்காயின் மேல் முள்ளை லேசாக நீக்கிவிட்டு, இரண்டாகப் பிளந்து, பாகற்காயின் உள்ளேயும், வெளியேயும் சிறிது உப்பையும், மஞ்சள் பொடியையும் தடவி அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பின், அதை கழுவி உபயோகித்தால், கசப்பு குறைந்திருக்கும்.
* சமையலுக்கு உபயோகிக்கும் பெருங்காயத்தை, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்த நீரை உபயோகித்தால், மணம் சீராக அமையும். பெருங்காயமும் குறைவாக செலவாகும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
* பெருங்காயம் கல் போன்று இருந்தால், உடைப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். எனவே, வெறும் கடாயை அடுப்பில் வைத்து, காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதை கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து போட்டு விட்டால், தனித் தனியாக, ஆறியவுடன் டப்பியில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
* காலிபிளவர், முள்ளங்கி, டர்னிப், முட்டைகோஸ் ஆகியவற்றை வாங்கி சில நாட்களுக்கு பின் சமைத்தால், சகிக்க முடியாத வாடை ஏற்படும். இதை தவிர்க்க, சிறிது எலுமிச்சை சாற்றையும், சர்க்கரையையும் கலந்து சமைக்க வேண்டும். அவ்வாறு சமைத்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
* காலிபிளவரை, சமைப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன், இலைகளை நீக்கிவிட்டு, ஒரு பிடி உப்பு கலந்த நீரில், குடை மாதிரி அமிழ்ந்திருக் கும்படி, வைக்க வேண்டும். இப்படி செய்தால், கண்ணுக்கு எளிதில் தெரியாத பூச்சிகள் அனைத்தும் நீரில் மிதந்து வரும். அதன் பின் காலிபிளவரை எடுத்து, நல்ல தண்ணீரில் கழுவி விட்டு உபயோகிக்கவும்.
* சில கத்திரிக்காய்கள் கடுப்பு குணம் கொண்டு இருக்கும். சிறிது சுண்ணாம்பு கலந்த நீரில், நறுக்கிய கத்திரிக்காய்களை, சிறிது நேரம் போட்டு வைத்து, பிறகு கழுவி உபயோகித்தால், கத்திரிக்காயின் கடுப்பு தன்மை போய்விடும்.
* தோசை சுடும்போது, தோசை கல்லிலிருந்து தோசை எடுக்க வராமல் ஒட்டிக் கொள்ளும். அத்தகைய சமயங்களில், ஒரு வெங்காயத்தை பாதியாக வெட்டி, தோசை கல்லில் ஒவ்வொரு முறையும் தோசை வார்ப்பதற்கு முன் தேய்த்தால், சுலபமாக தோசை எடுக்க வரும்.
நன்றி: தினமலர்.
* காலிபிளவர், முள்ளங்கி, டர்னிப், முட்டைகோஸ் ஆகியவற்றை வாங்கி சில நாட்களுக்கு பின் சமைத்தால், சகிக்க முடியாத வாடை ஏற்படும். இதை தவிர்க்க, சிறிது எலுமிச்சை சாற்றையும், சர்க்கரையையும் கலந்து சமைக்க வேண்டும். அவ்வாறு சமைத்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
* காலிபிளவரை, சமைப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன், இலைகளை நீக்கிவிட்டு, ஒரு பிடி உப்பு கலந்த நீரில், குடை மாதிரி அமிழ்ந்திருக் கும்படி, வைக்க வேண்டும். இப்படி செய்தால், கண்ணுக்கு எளிதில் தெரியாத பூச்சிகள் அனைத்தும் நீரில் மிதந்து வரும். அதன் பின் காலிபிளவரை எடுத்து, நல்ல தண்ணீரில் கழுவி விட்டு உபயோகிக்கவும்.
* சில கத்திரிக்காய்கள் கடுப்பு குணம் கொண்டு இருக்கும். சிறிது சுண்ணாம்பு கலந்த நீரில், நறுக்கிய கத்திரிக்காய்களை, சிறிது நேரம் போட்டு வைத்து, பிறகு கழுவி உபயோகித்தால், கத்திரிக்காயின் கடுப்பு தன்மை போய்விடும்.
* தோசை சுடும்போது, தோசை கல்லிலிருந்து தோசை எடுக்க வராமல் ஒட்டிக் கொள்ளும். அத்தகைய சமயங்களில், ஒரு வெங்காயத்தை பாதியாக வெட்டி, தோசை கல்லில் ஒவ்வொரு முறையும் தோசை வார்ப்பதற்கு முன் தேய்த்தால், சுலபமாக தோசை எடுக்க வரும்.
நன்றி: தினமலர்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
* டீ போடும் போது, டீத்தூளுடன் சர்க்கரையை சேர்த்து கொதிக்க விடாதீர்கள்; டீயின் சுவை குறைந்து விடும்.
* கீரை மசியல் செய்ய, கீரையை கடையும் போது, அதனுடன் கால் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கடைய, கீரை தனி சுவையுடன் இருக் கும்.
* சாம்பார் மணக்க வேண்டுமா? சாம்பாரை இறக்குவதற்கு முன், ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் மல்லி, ஒரு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொரித்து, சிறிது கரகரப்பாக அரைத்து கலக்கினால், சாம்பார் "கம... கம..."வென இருக்கும்.
* வெங்காயக் குழம்பு, புளிக்குழம்பு தயாரிக்கும் போது, கடுகுடன் சிறிது சோம்பு சேர்த்து தாளிக்கவும். வாசனையுடன் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
* சோடா உப்பை அடிக்கடி உணவில் சேர்க்காதீர்கள். வயிற்று உபாதைகளை ஏற்படுத்தக் கூடும்.
* கீரை மசியல் செய்ய, கீரையை கடையும் போது, அதனுடன் கால் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கடைய, கீரை தனி சுவையுடன் இருக் கும்.
* சாம்பார் மணக்க வேண்டுமா? சாம்பாரை இறக்குவதற்கு முன், ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் மல்லி, ஒரு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொரித்து, சிறிது கரகரப்பாக அரைத்து கலக்கினால், சாம்பார் "கம... கம..."வென இருக்கும்.
* வெங்காயக் குழம்பு, புளிக்குழம்பு தயாரிக்கும் போது, கடுகுடன் சிறிது சோம்பு சேர்த்து தாளிக்கவும். வாசனையுடன் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.
* சோடா உப்பை அடிக்கடி உணவில் சேர்க்காதீர்கள். வயிற்று உபாதைகளை ஏற்படுத்தக் கூடும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
* ரவா தோசை ஓட்டலில் கிடைப் பது போல் "மொறுமொறு'வென இருக்க வேண்டுமா? ரவை, மைதா, அரிசிமாவு 1:1:1 என்ற விகிதத்தில் கலந்து மிளகு, சீரகம், பெருங்காயம், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சுடவும்.
* ரசத்தை இறக்கி வைத்ததும், ஒரு துளி நெய் சேர்த்து பச்சை கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கிப் போடுங்கள். மணமும், ருசியும் எடுப்பாய் இருக் கும்.
* ரஸ்க் அல்லது ட்ரை பிரட்டை மிக்சியில் நன்றாகப் பொடி செய்து, ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெயில் வறுத்து வைத்துக் கொள்ளுங்கள். வறுவல், கிரேவி போன்றவற்றில் உப்பு அதிகமாகிவிட்டால், ரொட்டித்தூள் சிறிது தூவி அதிகப்படி உப்பை சரிகட்டி விடலாம். சாதாரணமாகவே, வறுவல், கிரேவி போன்றவற்றிற்கு சுவை கூட்ட இந்த வறுத்த ரொட்டித்தூள் ஒரு ஸ்பூன் சேர்க்கலாம்.
நன்றி: தினமலர்.
* ரசத்தை இறக்கி வைத்ததும், ஒரு துளி நெய் சேர்த்து பச்சை கொத்தமல்லியை பொடிப் பொடியாக நறுக்கிப் போடுங்கள். மணமும், ருசியும் எடுப்பாய் இருக் கும்.
* ரஸ்க் அல்லது ட்ரை பிரட்டை மிக்சியில் நன்றாகப் பொடி செய்து, ஒரு டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெயில் வறுத்து வைத்துக் கொள்ளுங்கள். வறுவல், கிரேவி போன்றவற்றில் உப்பு அதிகமாகிவிட்டால், ரொட்டித்தூள் சிறிது தூவி அதிகப்படி உப்பை சரிகட்டி விடலாம். சாதாரணமாகவே, வறுவல், கிரேவி போன்றவற்றிற்கு சுவை கூட்ட இந்த வறுத்த ரொட்டித்தூள் ஒரு ஸ்பூன் சேர்க்கலாம்.
நன்றி: தினமலர்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
* பூண்டு, வெங்காயம் போன்றவற்றை முதல் நாளே ப்ரிட்ஜில் வைத்து மறுநாள் உரித்தால், சுலபமாக தோல் உரிக்க வரும்.
* உணவில் காரம் அதிகமாகி விட்டதா? கவலையை விடுங்கள். அதில், சிறிது எலுமிச்சம் பழச்சாறை சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.
* பிரியாணி செய்யும் போது அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டால், சாதம் ஒன்றுடன் ஒன்று ஓட்டாமல் இருக்கும்.
* எலுமிச்சம் பழம் வாடாமல் இருக்க, தினசரி ஒரு மணி நேரம் நீரில் போட்டு எடுத்து வைக்கலாம். இப்படி செய்தால் ஒரு வாரம் வரை வாடாமல் இருக்கும்.
* வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
* உணவில் காரம் அதிகமாகி விட்டதா? கவலையை விடுங்கள். அதில், சிறிது எலுமிச்சம் பழச்சாறை சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.
* பிரியாணி செய்யும் போது அதில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டால், சாதம் ஒன்றுடன் ஒன்று ஓட்டாமல் இருக்கும்.
* எலுமிச்சம் பழம் வாடாமல் இருக்க, தினசரி ஒரு மணி நேரம் நீரில் போட்டு எடுத்து வைக்கலாம். இப்படி செய்தால் ஒரு வாரம் வரை வாடாமல் இருக்கும்.
* வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
* கீரையின் வேர்பகுதி தண்ணீரில் இருக்குமாறு வைத்திருந்தால், கீரை மறுநாள் வரை வாடாமல் இருக்கும்.
* மாங்கொட்டையின் உள்ளே உள்ள பருப்பை வெதுவெதுப் பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பித்தளை பாத்திரங்களை துலக்கினால், அவை பளிச்சிடும். அதே போல், காபி போட்ட பின், அந்த காபி தூளை காயவைத்து பாத்திரம் துலக்கினால், பாத்திரங்கள் மின்னும்.
* பட்டாணியுடன் சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைத்தால், வெந்ததும் வாசனை நன்றாக இருக்கும்.
* சாம்பார் செய்யும் போது அதில் ஒரு நெல்லிக் காயை சேர்த்தால், சாம்பாரின் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.
* உளுத்தம் வடை செய்யும் போது, சிறிது இட்லி மாவு சேர்த்து செய்தால், வடை எண்ணெய் குடிக்காது. சுவையும் நன்றாக இருக்கும்.
* மாங்கொட்டையின் உள்ளே உள்ள பருப்பை வெதுவெதுப் பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பித்தளை பாத்திரங்களை துலக்கினால், அவை பளிச்சிடும். அதே போல், காபி போட்ட பின், அந்த காபி தூளை காயவைத்து பாத்திரம் துலக்கினால், பாத்திரங்கள் மின்னும்.
* பட்டாணியுடன் சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைத்தால், வெந்ததும் வாசனை நன்றாக இருக்கும்.
* சாம்பார் செய்யும் போது அதில் ஒரு நெல்லிக் காயை சேர்த்தால், சாம்பாரின் சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.
* உளுத்தம் வடை செய்யும் போது, சிறிது இட்லி மாவு சேர்த்து செய்தால், வடை எண்ணெய் குடிக்காது. சுவையும் நன்றாக இருக்கும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
* முட்டை ஓட்டில் விரிசல் இருந்தால் வேக வைக்கும் போது, அதில் உள்ள திரவம் தண்ணீரில் கலந்து விடும். இதை தடுக்க தண்ணீரில் சிறிது வினிகர் ஊற்றி வேக வைக்கலாம்.
* அப்பளம், வடாம் போன் றவை வைத்திருக்கும் டப்பாவில், சிறிது பெருங்காயத் தை போட்டு வைத்தால், அவை அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.
* மைக்ரோ ஓவனில் அரிசியால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை மீண்டும் சூடாக்கும் போது, சிறிது நெய் கலந்து சூடாக்கினால், வேகமாக சூடாகும்.
* முகத்திற்கு பூசும் மஞ்சள் கிழங்கு நீண்ட நாட்கள் இருந் தால், உளுத்துப் போகிறதா? மஞ்சள் கிழங்குடன், கற்பூரத் தையும் சேர்த்து டப்பாவில் போட்டு மூடி வைத்தால் உளுத்து போகாமல் இருக்கும்.
* கலந்த சாதம் செய்ய, சாதத் தை ஆற வைக்கும் போது அதில் சிறிது நல்லெண் ணெய் ஊற்றி ஆறவைத்தால், உதிராக இருக்கும்.
* அப்பளம், வடாம் போன் றவை வைத்திருக்கும் டப்பாவில், சிறிது பெருங்காயத் தை போட்டு வைத்தால், அவை அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.
* மைக்ரோ ஓவனில் அரிசியால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை மீண்டும் சூடாக்கும் போது, சிறிது நெய் கலந்து சூடாக்கினால், வேகமாக சூடாகும்.
* முகத்திற்கு பூசும் மஞ்சள் கிழங்கு நீண்ட நாட்கள் இருந் தால், உளுத்துப் போகிறதா? மஞ்சள் கிழங்குடன், கற்பூரத் தையும் சேர்த்து டப்பாவில் போட்டு மூடி வைத்தால் உளுத்து போகாமல் இருக்கும்.
* கலந்த சாதம் செய்ய, சாதத் தை ஆற வைக்கும் போது அதில் சிறிது நல்லெண் ணெய் ஊற்றி ஆறவைத்தால், உதிராக இருக்கும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
* தேங்காய் சாதத்தில் சிறிதளவு வேர்கடலையை சிறிது சிறிதாக உடைத்து போட்டால், சுவை பிரமாதமாக இருக்கும்.
* மைக்ரோ ஓவனில் சமைக்கும் போது காய்கறிகளை ஒரே அளவாக நறுக்க வேண்டும்; இல்லையென்றால், சில வெந்தும், சில வேகாமலும் இருக்கும்.
* ரவா லட்டு செய்யும் போது சர்க்கரையுடன், சிறிது பால் பவுடர் சேர்த்து செய்தால், சுவை சூப்பராக இருக்கும்.
* தக்காளி சாதம் செய்யும் போது, தண்ணீருக்கு பதில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால், சுவை கூடுதலாக இருக்கும்.
* தேங்காய் துருவலை பால் சேர்த்து அரைத்து பர்பி செய் தால், கூடுதல் வெண்மை நிறமாக இருக்கும்.
* பக்கோடா செய்யும் போது சிறிது ரவை கலந்து செய்தால், மொறுமொறுவென்று சுவையாக இருக்கும். இதில் ரவைக்கு பதில் வேர்க்கடலையை பொடி செய்து கலந்தும் பக்கோடா செய்யலாம்.
நன்றி: தினமலர்.
* மைக்ரோ ஓவனில் சமைக்கும் போது காய்கறிகளை ஒரே அளவாக நறுக்க வேண்டும்; இல்லையென்றால், சில வெந்தும், சில வேகாமலும் இருக்கும்.
* ரவா லட்டு செய்யும் போது சர்க்கரையுடன், சிறிது பால் பவுடர் சேர்த்து செய்தால், சுவை சூப்பராக இருக்கும்.
* தக்காளி சாதம் செய்யும் போது, தண்ணீருக்கு பதில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால், சுவை கூடுதலாக இருக்கும்.
* தேங்காய் துருவலை பால் சேர்த்து அரைத்து பர்பி செய் தால், கூடுதல் வெண்மை நிறமாக இருக்கும்.
* பக்கோடா செய்யும் போது சிறிது ரவை கலந்து செய்தால், மொறுமொறுவென்று சுவையாக இருக்கும். இதில் ரவைக்கு பதில் வேர்க்கடலையை பொடி செய்து கலந்தும் பக்கோடா செய்யலாம்.
நன்றி: தினமலர்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
*வெங்காய பக்கோடா போரடித்து விட்டதா? வெண்டைக் காயை நீளமாக வெட்டி இத்துடன் சிறிது கடலை மாவு மற்றும் உப்பு கலந்து செய்தால், வெண்டைக் காய் பக்கோடா ரெடி.
*பஜ்ஜி மாவுடன், சீரகத்தூள் சேர்த்து செய்தால், சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.
* வெண்டைக்காய் வதக்கும் போது, ஒரு ஸ்பூன் மோர் ஊற்றி வதக்கினால், வழவழப்பின்றி சுவையாக இருக்கும்.
* பொங்கல் செய்யும் போது தண்ணீர் அதிகமாகி விட்டதா? அத்துடன் சிறிதளவு ரவையை வறுத்து கலந்துவிட்டால், கெட்டியாகி விடும்.
* சிப்ஸ் செய்யும் போது, உருளைக்கிழங்கை சீவி அதை கடலைமாவு கலந்த தண்ணீரில் நனைத்து உலர வைத்து, பின் பொரித்தால், நன்றாக இருக்கும்.
*பஜ்ஜி மாவுடன், சீரகத்தூள் சேர்த்து செய்தால், சுவையும் மணமும் அபாரமாக இருக்கும்.
* வெண்டைக்காய் வதக்கும் போது, ஒரு ஸ்பூன் மோர் ஊற்றி வதக்கினால், வழவழப்பின்றி சுவையாக இருக்கும்.
* பொங்கல் செய்யும் போது தண்ணீர் அதிகமாகி விட்டதா? அத்துடன் சிறிதளவு ரவையை வறுத்து கலந்துவிட்டால், கெட்டியாகி விடும்.
* சிப்ஸ் செய்யும் போது, உருளைக்கிழங்கை சீவி அதை கடலைமாவு கலந்த தண்ணீரில் நனைத்து உலர வைத்து, பின் பொரித்தால், நன்றாக இருக்கும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
* வடகத்திற்கு கூழ் காய்ச்சும் போது, சிறிது பால் சேர்த்து காய்ச்சினால், பொரித்தபின் வடகம் வெண்மையாக இருக்கும்.
* பலகாரங்களுக்கு பாகு காய்ச்சும் போது, பதம் வந்ததும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால், பாகு முறியாது.
* எலுமிச்சம் பழம் காய்ந்து விட்டதா, பிழிந்தால் சாறு வரவில்லையா? கவலையை விடுங்கள்... எலுமிச்சம் பழத்தை சூடான வெந்நீரில் சில நிமிடம் போட்டு வைத்திருந்து, பின் பிழிந்தால் சாறு நன்கு வரும்.
* புளித்த தோசை மாவில் சிறிது சர்க்கரை கலந்து தோசை வார்த்தால், புளிப்பு சுவை குறைவாக இருக்கும்.
* பலாப்பழத்தை ஒரு பிளாஸ்டிக் கவரினுள் வைத்து, ப்ரிஜ்ஜில் சில நிமிடங்கள் வைத்திருந்த பின் நறுக்கினால், பால் போன்ற பிசின் கையில் ஒட்டாது.
* பலகாரங்களுக்கு பாகு காய்ச்சும் போது, பதம் வந்ததும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால், பாகு முறியாது.
* எலுமிச்சம் பழம் காய்ந்து விட்டதா, பிழிந்தால் சாறு வரவில்லையா? கவலையை விடுங்கள்... எலுமிச்சம் பழத்தை சூடான வெந்நீரில் சில நிமிடம் போட்டு வைத்திருந்து, பின் பிழிந்தால் சாறு நன்கு வரும்.
* புளித்த தோசை மாவில் சிறிது சர்க்கரை கலந்து தோசை வார்த்தால், புளிப்பு சுவை குறைவாக இருக்கும்.
* பலாப்பழத்தை ஒரு பிளாஸ்டிக் கவரினுள் வைத்து, ப்ரிஜ்ஜில் சில நிமிடங்கள் வைத்திருந்த பின் நறுக்கினால், பால் போன்ற பிசின் கையில் ஒட்டாது.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
* தேங்காய் பர்பி செய்யும் போது, சிறிது கடலைமாவு சேர்த்து செய்தால், சுவை பிரமாதமாக இருக்கும்.
* பிரியாணி செய்யும் போது தேங்காய் பாலுக்கு பதிலாக, கட்டித் தயிர் விட்டு செய்தால், பிரியாணி உதிரியாக இருக்கும்.
* தேங்காய் சாதம் செய்யும் போது அத்துடன், சிறிதளவு வறுத்தரைத்த வெந்தயப் பொடி கலந்தால், சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.
* வெண்ணெயில் இருந்து நெய் உருக்கும் போது, முருங்கை இலை கிடைக்காவிட்டால், சிறிது வெந்தயம் போட்டு இறக்கினால் வாசனை பிரமாதமாக இருக்கும்.
* முட்டை வேக வைக்கும் போது, உப்பு போட்டு வேக வைத்தால், மேல் தோல் எளிதில் உரிக்க வரும்.
* பிரியாணி செய்யும் போது தேங்காய் பாலுக்கு பதிலாக, கட்டித் தயிர் விட்டு செய்தால், பிரியாணி உதிரியாக இருக்கும்.
* தேங்காய் சாதம் செய்யும் போது அத்துடன், சிறிதளவு வறுத்தரைத்த வெந்தயப் பொடி கலந்தால், சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.
* வெண்ணெயில் இருந்து நெய் உருக்கும் போது, முருங்கை இலை கிடைக்காவிட்டால், சிறிது வெந்தயம் போட்டு இறக்கினால் வாசனை பிரமாதமாக இருக்கும்.
* முட்டை வேக வைக்கும் போது, உப்பு போட்டு வேக வைத்தால், மேல் தோல் எளிதில் உரிக்க வரும்.
Last edited by மகி on Sun Feb 28, 2010 3:16 am; edited 1 time in total
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
* குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால், சிறிது அரிசியை வறுத்து நைசாக அரைத்து குழம்பில் கலந்து விட் டால், அதிகப்படியான உப்பு குறைந்துவிடும்.
* கோதுமை மாவில் சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால், நீண்ட நேரம் நமத்துப் போகாமல் இருக்கும். அதேபோல், ஒரு கப் மாவிற்கு ஒரு ஸ்பூன் ரவை என்ற வீதத்தில் சேர்த்து செய்தால், பூரி நன்கு உப்பலாக வரும்.
* வழக்கமாக தயார் செய்யும் சப்பாத்தி மாவுடன், துருவி வேக வைத்து மசித்த காரட் மற்றும் சீரகப் பொடி ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி செய்தால் சுவை நன்றாக இருக்கும். இது சத்து நிறைந்த உணவும் கூட.
* வெந்நீரில் சிறிது டால்டா கலந்து, கோதுமை மாவில் ஊற்றி பிசைந்து சப்பாத்தி செய்தால், மிகவும் சாப்ட்டாக இருக்கும்.
* மைக்ரோ ஓவனில் மறு சூடு செய்யும் போது, சாதம், பொரியல் போன்றவற்றின் மீது தண்ணீரை தெளித்து பின்னர் சூடு செய்தால், அவை வறண்டு போகாமல் இருக்கும்.
நன்றி: தினமலர்.
* கோதுமை மாவில் சிறிது சர்க்கரை சேர்த்து பூரி செய்தால், நீண்ட நேரம் நமத்துப் போகாமல் இருக்கும். அதேபோல், ஒரு கப் மாவிற்கு ஒரு ஸ்பூன் ரவை என்ற வீதத்தில் சேர்த்து செய்தால், பூரி நன்கு உப்பலாக வரும்.
* வழக்கமாக தயார் செய்யும் சப்பாத்தி மாவுடன், துருவி வேக வைத்து மசித்த காரட் மற்றும் சீரகப் பொடி ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி செய்தால் சுவை நன்றாக இருக்கும். இது சத்து நிறைந்த உணவும் கூட.
* வெந்நீரில் சிறிது டால்டா கலந்து, கோதுமை மாவில் ஊற்றி பிசைந்து சப்பாத்தி செய்தால், மிகவும் சாப்ட்டாக இருக்கும்.
* மைக்ரோ ஓவனில் மறு சூடு செய்யும் போது, சாதம், பொரியல் போன்றவற்றின் மீது தண்ணீரை தெளித்து பின்னர் சூடு செய்தால், அவை வறண்டு போகாமல் இருக்கும்.
நன்றி: தினமலர்.
Last edited by மகி on Sun Feb 28, 2010 3:17 am; edited 1 time in total
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
* ரவா தோசை செய்யும் போது அத்துடன் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன்கள் கடலைமாவு சேர்த்து செய்தால் தோசை மொறுமொறுவென்று இருக்கும்.
* தேங்காய் சட்னி செய்யும் போது புளிக்கு பதிலாக சிறிது மாங்காய் சேர்த்து அரைத்தால் வித் தியாசமான சுவையுடன் இருக்கும். அதே போல் தேங்காய் சட் னிக்கு பச்சை மிளகாயை எண் ணெயில் வதக்கிய பின் அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* இட்லிக்கான அரிசியுடன் சிறிது அவல் சேர்த்து ஊறவைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போன்று இருக்கும்.
* கிழங்குகளை வேக வைக்கும் முன், உப்பு கலந்த நீரில் ஊறவைத்த பின் வேக வைத்தால் விரைவில் வெந்து விடும்.
* வடைக்கு அரைத்த மாவை சிறிது எடுத்து தண்ணீரில் போட்டதும், அது தண்ணீரில் மிதந்தால் மாவு பதமாக இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.
* தேங்காய் சட்னி செய்யும் போது புளிக்கு பதிலாக சிறிது மாங்காய் சேர்த்து அரைத்தால் வித் தியாசமான சுவையுடன் இருக்கும். அதே போல் தேங்காய் சட் னிக்கு பச்சை மிளகாயை எண் ணெயில் வதக்கிய பின் அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* இட்லிக்கான அரிசியுடன் சிறிது அவல் சேர்த்து ஊறவைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போன்று இருக்கும்.
* கிழங்குகளை வேக வைக்கும் முன், உப்பு கலந்த நீரில் ஊறவைத்த பின் வேக வைத்தால் விரைவில் வெந்து விடும்.
* வடைக்கு அரைத்த மாவை சிறிது எடுத்து தண்ணீரில் போட்டதும், அது தண்ணீரில் மிதந்தால் மாவு பதமாக இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
* பாகற்காயை சிறிது நேரம் உப்பு நீரில் ஊறவைத்த பின் சமைத்தால், கசப்பு சுவை குறைவாக இருக்கும். அல்லது பாகற் காயை வேக வைத்து தண்ணீரை வடித்த பின் வதக்கினாலும் கசப்பு சுவை குறைவாக இருக்கும்.
* சுண்டல் செய்வதற்காக, பட்டாணி வேக வைக்கும் போது குழைந்துவிட்டால், அதில் ஐஸ்வாட்டர் ஊற்றி சிறிது நேரம் வைத்திருந்து பின் சுண்டல் செய்தால் நன்றாக இருக்கும்.
* கொழுக்கட்டைக்கான மாவுடன் சிறிது பால் சேர்த்து பிசைந்து செய்தால் கொழுக்கட்டை விரியாமல் இருக்கும்.
* ஆம்லெட் செய்ய முட்டை கலக்கும் போது, சிறிது வெண் ணெய் அல்லது சில துளி பால் சேர்த்து கலந்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* மோர் குழம்பில் சிறிது கடுகை அரைத்து விட்டால் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.
* சுண்டல் செய்வதற்காக, பட்டாணி வேக வைக்கும் போது குழைந்துவிட்டால், அதில் ஐஸ்வாட்டர் ஊற்றி சிறிது நேரம் வைத்திருந்து பின் சுண்டல் செய்தால் நன்றாக இருக்கும்.
* கொழுக்கட்டைக்கான மாவுடன் சிறிது பால் சேர்த்து பிசைந்து செய்தால் கொழுக்கட்டை விரியாமல் இருக்கும்.
* ஆம்லெட் செய்ய முட்டை கலக்கும் போது, சிறிது வெண் ணெய் அல்லது சில துளி பால் சேர்த்து கலந்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* மோர் குழம்பில் சிறிது கடுகை அரைத்து விட்டால் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
* அடைக்கு அரைக்கும் போது சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து அரைத்தால் அடை மொறுமொறுப்பாக இருக்கும். அதேபோல், துவரம்பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சம அளவிலும் அரிசி கொஞ்சமாகவும் போட்டு செய்தாலும் அடை மொறுமொறுப்பாக இருக்கும்.
* உருளைக்கிழங்கு வறுக்கும் போது அத்துடன் சிறிது அரிசி மாவு தூவினால் பொரியல் மொறுமொறுப்பாக இருக்கும்.
* சேப்பங்கிழங்கை தோல் உரித்து பிரிட்ஜில் வைத்து சிறிதுநேரம் கழித்து சமைத்தால் கொழகொழப்பு தன்மை இல்லாமல் இருக்கும்.
* கூட்டு செய்யும் போது அதில் வேர்க்கடலையை ஒன்றிரண்டாக அரைத்து போட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
* குழம்பில் உள்ள உப்பை எடுக்க தக்காளிப் பழத்தை நறுக்கி போட்டு கொதிக்க வைத்தால் உப்பு குறைந்துவிடும்.
* உருளைக்கிழங்கு வறுக்கும் போது அத்துடன் சிறிது அரிசி மாவு தூவினால் பொரியல் மொறுமொறுப்பாக இருக்கும்.
* சேப்பங்கிழங்கை தோல் உரித்து பிரிட்ஜில் வைத்து சிறிதுநேரம் கழித்து சமைத்தால் கொழகொழப்பு தன்மை இல்லாமல் இருக்கும்.
* கூட்டு செய்யும் போது அதில் வேர்க்கடலையை ஒன்றிரண்டாக அரைத்து போட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.
* குழம்பில் உள்ள உப்பை எடுக்க தக்காளிப் பழத்தை நறுக்கி போட்டு கொதிக்க வைத்தால் உப்பு குறைந்துவிடும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
* குருமா, கூட்டு போன்றவை செய்யும் போது தண்ணீர் அதிகமாகி விட்டதா, கவலை வேண்டாம்? அத்துடன் சிறிது பொட்டுக்கடலையை நைசாக அரைத்து சேர்த்தால் கெட்டியாகிவிடும்.
* தயிர் பச்சடி நீர்த்துப் போய் விட்டால், அத்துடன் சிறிது வேர்க்கடலைப் பருப்பை வறுத்துப் நைசாக அரைத்து போட்டால் கெட்டியாகிவிடும்.
* கடலைப் பருப்பை வறுத்து, பின் போளி செய்தால், போளி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
* கோதுமை அல்வா செய்யும் போது, பதம் தவறி தண்ணீர் அதிகமாகிவிட்டால், அதில் சிறிதளவு சோளமாவைச் சேர்க்க அல்வா கெட்டியாகும். சுவையும் நன்றாக இருக்கும்.
* வெங்காயத் தயிர் பச்சடி செய்யும் போது, கெட்டியான தேங்காய் பால் சிறிது சேர்க்க பச்சடி மிகவும் சுவையாக இருக்கும்.
* ஜவ்வரிசி வடகம் செய்யும் போது, தேவையான அளவு எலுமிச்சம்பழச் சாறு, ஓமம் சேர்த்து செய்ய மிகவும் சுவையாக இருக்கும்.
நன்றி: தினமலர்.
* தயிர் பச்சடி நீர்த்துப் போய் விட்டால், அத்துடன் சிறிது வேர்க்கடலைப் பருப்பை வறுத்துப் நைசாக அரைத்து போட்டால் கெட்டியாகிவிடும்.
* கடலைப் பருப்பை வறுத்து, பின் போளி செய்தால், போளி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
* கோதுமை அல்வா செய்யும் போது, பதம் தவறி தண்ணீர் அதிகமாகிவிட்டால், அதில் சிறிதளவு சோளமாவைச் சேர்க்க அல்வா கெட்டியாகும். சுவையும் நன்றாக இருக்கும்.
* வெங்காயத் தயிர் பச்சடி செய்யும் போது, கெட்டியான தேங்காய் பால் சிறிது சேர்க்க பச்சடி மிகவும் சுவையாக இருக்கும்.
* ஜவ்வரிசி வடகம் செய்யும் போது, தேவையான அளவு எலுமிச்சம்பழச் சாறு, ஓமம் சேர்த்து செய்ய மிகவும் சுவையாக இருக்கும்.
நன்றி: தினமலர்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
வெங்காய சூப் தயாரிக்கும்போது அதனுடன் காட்டேஜ் சீஸ் சேர்த்தால் சூப் ருசியாக அமையும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
ஆம்லேட்டுகள் நன்றாகவும் ருசியுடனும் திகழ முட்டையை உடைத்து ஊற்றியவுடன் சிறிது பாலையும் உளுத்தம்மாவையும் அதனுடன் சேர்த்து ஆம்லேட் தயாரிக்கவும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
தரையில் தயிர் சிந்திவிட்டால் உடனே அதனை ஈரத் துணியால் துடைக்கவும். பிறகு அந்த இடத்தில் சில சொட்டுகள் வினீகரை ஊற்றி துடைக்கவும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
உலர் திராட்சையை காற்றுப் புகாவண்ணம் இறுக்கமாக மூடிய பாட்டிலில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு வரும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
சாம்பார் பொடியை மொத்தமாக அரைத்து வைத்துக் கொண்டு விட்டால் சில நாட்கள் ஆன உடனேயே குணமும் மணமும் குறைந்து விடும்.
நன்றி: வெப்துனியா.
நன்றி: வெப்துனியா.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
இஞ்சி, பூண்டு சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன் படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
பன்னீரை நீண்ட நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் அது கடினமாக மாறி விடும் இதை மீண்டும் மிருதுவாக மாற்ற சிறிது நேரம் வென்னீரில் வைக்கலாம்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
காய்ந்த பழங்களை பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Re: சமையல் குறிப்புகள்!
சமைக்கும் போது காய்கறிகள் அதன் நிறத்தையும் மணத்தையும் இழக்காமல் இருக்க திறந்து வைத்து சமைக்கவும்.
மகி- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009
Page 5 of 15 • 1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15
Similar topics
» சைவ சமையல் - குறிப்புகள்!
» அசைவ சமையல் - குறிப்புகள்!
» சமையல்!
» 30 வகை எண்ணெய் இல்லாத சமையல்
» மருத்துவக் குறிப்புகள்.
» அசைவ சமையல் - குறிப்புகள்!
» சமையல்!
» 30 வகை எண்ணெய் இல்லாத சமையல்
» மருத்துவக் குறிப்புகள்.
Page 5 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|