தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

கைலாயமாலை (எழுதியவர்: முத்துராச கவிராசர் )

2 posters

Go down

கைலாயமாலை  (எழுதியவர்: முத்துராச கவிராசர் ) Empty கைலாயமாலை (எழுதியவர்: முத்துராச கவிராசர் )

Post by venuavs Tue Nov 29, 2011 3:53 pm

காப்பு
வெண்பா
திங்களொடு கங்கையணி செஞ்சடையர் மங்கையொரு
பங்கர் கயிலாய மாலைக்குத் -துங்கச்
சயிலமிசைப் பாரதத்தைத் தானெழுதும் அங்கைச்
சயிலமுகத் தோன்துணைய தரம்.
நூல்
கலிவெண்பா
பாடல்கள் 01- 10
சீர்மேவு மேருகிரித் தென்திசையோர் சம்புமரம்
பேர் மேவ நின்ற பெருமையினால்-ஏர்மேவு
நாவலந்தீ வென்னுமொரு நாமமுற அத்தீவிற்
காவல் மருவுநவ கண்டிகளாய்-மேவதனுள்
நானா வளங்கெழுசீர் நற்பரத கண்டத்துள்
வானோர் புகழீழ மண்டலத்தில்- மேல்நாள்
உதபகுல ராசன் உதயமதி வாசன்
சிதைவின்மனு ராசவம்ச தீரன்-துதையளிகள்
பாடுமலர் ஆத்திபுனை பார்த்திவன்தன் சீர்த்திமுற்றும்
தேடுந் தனிக்கவிதைச் செம்பியர்கோன்- நீடுகரைப்
பொன்னித் துறைவன் புலிக்கொடியன் பூவில்மன்னர்
மன்னனெனுஞ் சோழன் மகளொருத்தி-கன்னிமின்னார்
தேடுங் கடலருவித் தீர்த்தசுத்த நீரகத்துள்
ஆடிப் பிணிதணிப்பத் தானினைந்து-சேடியர்தஞ்
சேவைகளுங் காவலுறு சேனையுமாய் வந்திறங்கிப்
பாவையுறு தீர்த்தம் படிந்ததற்பின்-ஏர்வைபெறு
கங்குலுற எங்குமிகு காவ லரண்பரப்பிச்
சங்கையுறு கூடாரந் தானமைத்து-மங்கை
விரிந்தசப்ர மஞ்சமெத்தை மெல்லணையின் மீதே
பொருந்துதுயி லாயிருக்கும் போது-வரிந்தசிலை
பாடல்கள் 11- 20
வேடர்குல மாதுபுணர் வேலா யுதகரன்செங்
காடன் புதல்வன் கதிர்காமன்-ஏடவிழுந்
தார்க்கடம்பன் பேர்முருகன் தாமோ தரன்மருகன்
சீர்க்குரவன் தேவர் திரட்கொருவன்- சூர்ப்பகையை
மாற்றுங் குகன்குழகன் வாய்ந்தஅடி யார் துயரை
ஆற்றுங் குமரன் அருளாலே-போற்றுதவர்
வாய்ந்த கதிரைமலை வாழு மடங்கன்முகத்
தாய்ந்த நராகத்(து) அடலேறு-சாய்ந்துகங்குல்
பேரவதன்முன் ஏகியந்தப் போர்வேந்தன் மாமகள்தன்;
காவல் கடந்தவளைக் கைப்பிடித்தே-ஆவலுடன்
கொண்டேகித் தன்பழைய கோலமலை மாமுழைஞ்சில்
வண்டார் குழலை மணம்புணர்ந்(து)-உண்டான
பூவிலநு போகம் பொருந்திப் புலோமசையுங்
காவலனும் போலக் கலந்திடுநாள்-தாவில்மணப்
பூமான் மதிக்கப் புவிமான் மகிழ்ச்சியுறக்
கோமான் மனுவின் குலம்விளங்க-நாமானும்
உன்னிமிகும் ஆசி உரைத்துத் திருத்தமிகு
தன்னிதய சந்தோஷந் தான்பெருக-மன்னுபுவி
மாந்தர்சுக மேவ மனுநீதி யுண்டாக
வேந்தர்கள்தம் நெஞ்சம் மிகநடுங்கப்-பூந்தவிசின்
பாடல்கள் 21- 30
வேதன்கை நோகவரும் மேலோன் விழிதுயிலப்
போதன்மணி மேனி புளகரும்பச் சோதிபெறு
தேவா லயங்கள் செயும்பூ சனைசிறக்க
மேவுஆலை வில்லி விருதுகட்ட-நாவார்
மறையோர்கள் வேள்விமல்க மாதவங்க ளோங்கக்
குறையாது நன்மாரி கொள்ள-நிறைவாகச்
செந்நெல் விளையச் செகம்செழிக்கச் செல்வமுற
மன்னன் மகள்தன மணிவயிற்றில்-மன்னு
கருவாய்ந்(து) அயனமைத்த கட்டளைகள் திட்ட
உருவாய்ந்து பத்துமதி யொத்துத்-திருவாய்ந்த
திங்கள் முகத்தழகுஞ் செய்யவடி வாலழகும்
துங்கமுறும உச்சிச் சுழியழகும்-பொங்குமணிக்
கண்ணழகும் மூக்கழகுங் காதழகுங் கையழகும்
மண்ணில நராபோல் வடிவழகும்-நண்ணி
வரசிங்க ராயன் மகாராச ராசன்
நரசிங்க ராசனெனும் நாமத்-துரைசிங்கம்
வந்துபிறந் திந்தவள மண்டலமெல் லாம்மதிக்க
இந்துவென வேவளரும் ஏல்வையினிற்-பிந்தியொரு
பெண்பிறந்தாள் அந்தவெழிற் பெண்ணையுமுன் அண்ணலையுங்
கண்போல் வளர்த்துக் கவின்பெறலும்-நண்பாகத்
பாடல்கள் 31- 40
தந்தையர்க்குந் தாயருக்குஞ் சாற்றுமணம் ஆற்றுவித்த
கந்தனுமை மைந்தன் கருணையினால்-வந்த
இருவருக்கும் நன்முகூர்த்த மிட்டுமகிழ் பூப்பத்
தருவிருக்கு மாலைவடஞ் சாத்தித்-திருவிருக்குஞ்
செய்யமணஞ் செய்து திறல்வேந்தர் போற்றிநிற்பத்
துய்யநவ ரத்னமுடி சூட்டியபின்-பையரவின்
உச்சியினின் றாடும் ஒருவனின் ஆகுமென்ன
மெச்சுக்ர வாளகிரி வெற்புமட்டும்-உச்சிதஞ்சேர்
தன்னாணை செல்லத் தரியலர்கள் தாள்வணங்கப்
பொன்னாட் டரசன் புகழ்குறையப்-பன்னாட்
டரசர் திறையளப்ப அந்தணர்கள் வாழ்த்த
முரசதிரப் பேரி முழங்க-வரிசையுடன்
சங்கமெழுந் தார்ப்பத் தமனியப்பொற் காளாஞ்சி
மங்கையர்க ளேந்தி மருங்கி(ல்)நிற்ப-எங்குமிகு
கட்டியங்க ளார்ப்பக் கனஅரி யாசனத்தில்
இட்டமெத்தை மீதில் இனிதிருந்து-திட்டமுடன்
நங்கோ னிராமன் நடத்தியுல காண்டதுபோற்
செங்கோ லரசு செலுத்தும்நாள்-மங்காத
பாவலர்கள் வேந்தன் பகருமி யாழ்ப்பாணன்
காவலன்தன் மீது கவிதைசொல்லி- நாவலர்முன்
பாடல்கள் 41- 50
ஆனகவி யாமின் அமைவுறவா சித்திலும்
மானபரன் சிந்தை மகிழ்வாகிச்-சோனைக்
கருமுகில் நேருங் கரன்பரிசி லாக
வருநகர மொன்றை வழங்கத்-தருநகரம்
அன்றுமுதல் யாழ்ப்பாணம் ஆன பெரும்பெயராய்
நின்ற பதியில் நெடுங்காலம்-வென்றிப்
புவிராசன் போலப் புகழினுட னாண்ட
கவிராசன் காலங் கழிய-அவிர்கிரண
சந்திரனில் லாதவெழிற் றாரகைபோல் வானரசாள்
இந்திரனில் லாத இமையவர்போல்-விந்தை
கரைசேரிம் மாநகர்கோர் காவலரண் செய்யுந்
தரையரச னின்றித் தளம்ப-விரைசேருந்
தாமமணி மார்பன் தபனகுல ராசன்
சேமநிதி யாளன்திறற் பணியால்-நாமநன்னீர்
மேவரச ராதிபதி வேலினரை நேர்விறல்கொள்
மேவலவர் ஆவிகவர் வீரபரன்- பாவின்மொழி
மாதர்மடல் மீதெழுது மாமதன ரூபன்மதி
ஆதரவு நீதி அருட்குரிசில்-தீதகலும்
மாகதர்கள் கோசலர்ம லாடர்கரு நாடர்மிகு
கேகயர்கள் மாளவர்கள் சேரளர்கள்-வாகைபெறு
பாடல்கள் 51- 60
சோனகர்வி ராடர்துளு வாதியர்கள் சூரமிகு
சீனரொடு சாவகர்கள் சேதியர்கள்-ஆனவெகு
சேனைபுடை சூழவய மாவின்மிசை சேனையின
மானமுடன் மேவுமகா ராசதுரை-வானகத்தில்
தூண்டிடினும் தீயினிடைத் தூண்டிடினும் நீரினிடைத்
தூண்டிடினும் செல்லுந் துரகத்தான் நீண்ட
உரகன்முடி நோவ உரசரண நாட்டுங்
கரடதட கும்பக் களிற்றான்-முரண்இரவி
இட்டதனி யாழி யிரதமிணை யல்ல வெனும்
வட்டமுறு மாழி மணித்தேரோன்-முட்டருதாள்
கஞ்சன் படைகள் களம்வரினுங் காதமெதிர்
பஞ்செனநீ றாக்கும் பதாதியான் செஞ்சுடரோன்
ஓங்கு கிரண உலகஅர சைச்செயித்துத்
தாங்கிநிழல் செய்யுந் தனிக்குடையான்-நீங்காமல்
அண்டர் உலகம்நிமிர்ந் தாடும் பரிசுடைத்தாய்க்
கொண்டவிடை காட்டுங் கொடியினான்-ஒண்டிறல்சேர்
கொண்டல்க ளோர் ஏழும் குரைகடல்ஏ ழுங்குமுறி
மண்டுவபோல் ஆர்ப்பரிக்கும் வாத்தியத்தான்-புண்டரிகத்(து)
இந்திரைமுன் எண்மர் இலக்குமியர் தம்பதியாச்
சந்ததம்நின் றாடுஞ் சமுகத்தான்-சந்த்ரதரன்
பாடல்கள் 61- 70
நம்பன் பரசுதரன் நாதன் கயிலாயன்
செம்பதுமத் தாள்வணங்குஞ் சென்னியான்-அம்பொனிற்செய்
வென்றிதரும் பட்டமுடன் வெண்திருநீ றுந்துலங்க
ஒன்ற அணிந்தநுத லோடையான்-துன்றியறை
விஞ்சுபடி யோர்கள் மெலிவுகுறை பார்த்தருள்செய்
கஞ்சமலர் அஞ்சுமிரு கண்ணினான்-சஞ்சரிக்கத்
தேனுலவு பூமணமுஞ் சேர்சந் தனம்பனிநீர்
நானமண முங்கமழும் நாசியான்-வானுவகுங்
காசினியும் பாதலமுங் காவல் செயவரினும்
வாசகந்தப் பாதசத்ய வாய்மையான்-தேசுபெற
அப்புலவுஞ் செஞ்சடிலத்(து) அண்ணல் பெருமைகளைச்
செப்பமுடன் கேட்குந் திருச்செவியான்-எப்பொழுதுங்
காதலொடு காண்போர் கலிபசிதுக் கந்தணிக்குஞ்
சீதபுண்ட ரீகத் திருமுகத்தான்-மீதுயர்ந்த
அட்டகிரி அற்பமென அம்புவியைத் தாங்குதற்குத்
திட்டமுடன் வாய்ந்த திறற்புயத்தான்-கட்டழகன்
கேசவன்தன் மார்பிற் கிளர்சலசை நேசமுடன்
வாசமுறச் சேரும் மருமத்தான்-ஓசைப்
பனகமுடி மீதுவளர் பாரரசர் தங்கள்
கனகமுடி ஓங்குகழற் காலான்-தனதனிகர்
பாடல்கள் 71- 80
மாதனத்தான் மாதிறத்தான் மாதுரத்தான் மால்நிறத்தான்
ஆதரத்தான் ஆழிவைத்தான் ஆர்வனத்தான்-வேதன் அத்தான்
போலும் எழிலுடையான் பூவுடையான் பூணுடையான்
மேலும் வயமுடையான் வீறுடையான்-கோலநகர்ச்
செல்வமது ரைச்செழிய சேகரன்செய் மாதங்கள்
மல்க வியன்மகவாய் வந்தபிரான்-கல்விநிறை
தென்ன(ன்)நிக ரான செகராசன் தென்னிலங்கை
மன்னவனா குஞ்சிங்கை ஆரியமால்-தன்னுழையிற்
பொன்பற்றி யூரனண்டர் போரில் அழல்சூரன்
மின்பற்று காலின் விலங்குதன்னை-அன்புற்று
வெட்டுவித்து விட்டபுகழ் வேளாளர் வங்கிஷத்தில்
திட்டமுடன் வந்து செனனித்தோன்-மட்டுவுஞ்
செங்குவளைத் தார்மார்பன் செல்வரா யன்பயந்த
துங்கமலை யுச்சிச் சுடர்விளக்குக்-கங்கைகுலம்
கொண்டாடுங் கொண்டல் குடிமைகளோர் ஐவரையுந்
தொண்டாக வேகொணர்ந்த சூழிச்சியுள்ளான்-மண்டு விடை
தூண்டும்ஏ ராளன் சுகிர்தன் சுபவசனன்
பாண்டி மழவன் பரிந்துசென்று-வேண்டிப்
பெருகுபுகழ் யாழ்ப்பாணம் பேரரசு செய்ய
வருகுதிநீ யென்று வணங்கத்-திருவரசு
பாடல்கள் 81- 90
மாறற்குச் செம்பொன் மகுடமணிந் தோனின்வழி
காரணிவ னானபெருங் காரணத்தாற்-பேறுதரச்
சாற்று மிவன்மொழியைத் தன்மனத்தோர்ந்(து) எண்ணிமறு
மாற்றமுரை யாதுநல்ல வாய்மைசொல்லித்-தோற்றமிகு
பாண்டவர்கள் தங்கள் பழையநக ரைத்துறந்து
மீண்(டு)இந் திரப்பிரத்த மேவியபோல்-நீண்டவனும்
நீடுவட மதுரை நீத்துமக ராலயவாய்
நாடுந் திருத்துவரை நண்ணியபோற்-சூடுமலர்க்
கொன்றைச் சடையோன் குளிர்சுவர்க்கம் விட்டிறங்கிச்
சென்றுதிரு வாரூரிற் சேர்ந்ததுபோல்-துன்றுபுகழ்த்
தென்மதுரை விட்டுத் திருநகர்யாழ்ப் பாணத்து
மன்னரசு செய்ய மனமகிழ்ந்து-மின்னொளிசேர்
வெங்கதிரைக் கண்டு விரிந்துகளி கொண்டலர்ந்த
செங்கமலங் கூம்பத் திசையிருண்டு-கங்குல்வரச்
சங்கினங்கள் ஈன்ற தரளத்தைச் சந்தரனெனப்
பொங்குங் குமுதம் பொதியவிழிப்பப்- பொங்கருறு
பூவின் மூசநிறை யும்புனலில் வாழ்கயல்கண்
மேவியவளர் பூக மிடறுடைப்பத் -தாவும்
மதித்த வளங்கொள் வயல் செறிதல் லூரிற்
கதித்தமனை செய்யக் கருதி - விதித்ததொரு
பாடல்கள் 91- 100
நல்ல முகூர்த்தமிட்டு நாலுமதி லுந்திருத்திச்
சொல்லுஞ் சுவரியற்றித் தூண்நிரைத்து - நல்ல
பருமுத் தரம்பரப்பிப் பல்கணியும் நாட்டித்
திருமச்சு மேல்வீடு சேர்த்துக் - கருமச்
சிகரந் திருத்தித் திருவாயி லாற்றி
மிகுசித்ர மெல்லாம் விளக்கி - நிகரற்ற
சுற்றுநவ ரத்னவகை சுற்றியழுத் தித்திருத்திப்
பத்திசெறி சிங்கா சனம்பதித்து - ஒத்தபந்தற்
கோலவி தானமிட்டுக் கொத்துமுத்தின் குச்சணிந்து
நாலுதிக்கும் சித்ரமடம் நாட்டுவித்துச்-சாலும்
அணிவீதி தோறும் வளர்கமுகு வாழை
அணியணியா யங்கே அமைத்துத் - துணிவுபெறுந்
தோரணங்க ளிட்டுச் சுதாகலச கும்பநிகர்
பூரண கும்பம் பொருந்தவைத்துக் - காரணமாய்
எல்லா எழிலும் இயற்றி நிறைந்தபின்பு
நல்லோர் அருள்முகூர்த்தம் நண்ணுமென்று-சொல்லிடலும்
மன்னவனுஞ் சீதநதி மஞ்சனமா டிச்செறிந்து
சென்னியின்நீ ராற்றிச் சிகைதிருத்தித்-துன்னுமெழிற்
பொன்னினங்கி சாத்திப் புகழ்கனகப் பட்டுடுத்து
மன்னுதிரு நீறுவடி வாயணிந்து-உண்ணுமொளி
பாடல்கள் 101- 110
உத்தரீ கஞ்சாத்தி உயர்ந்தசெம்பொற் பாகைதன்னைச்
சித்திரம் தாகச் சிரத்தணிந்தே-ஒத்த
கடுக்கனிட்டுக் கைகளுக்குக் கங்கணமுஞ் சாத்தி
அடுக்கயிரல் ஆழி யணிந்து-தொடுத்தமைத்த
கண்டசரத் தோடுவரு காய்கதிரோன் தன்கிரணம்
மூண்ட பதக்கம் உரத்தணிந்து-கொண்டுடையிற்
சுற்றியரை ஞாண்பொருத்தித் தோள்வலயஞ் சோதிமணி
வெற்றிக் கழல்பதத்தின் மீதணிந்து-மற்றுஞ்
சகலா பரணமிட்டுத் தந்திமுகற் போற்றிப்
புகழ்பூ சனைகள் புரிந்து - அகலாது
சிங்கார மாக்கித் திருத்தியழ காயமைத்த
சிங்கா சனத்திற் சிறந்திருப்பச்-சங்கார்ப்பத்
தண்ணுமைசல் லாரி தடாரி திமில்முரசு
நண்ணு முருடு நகுபேரி-எண்ணுகின்ற
மத்தளங்கைத் தாள மணிக்கா களஞ்சுரிகை
தித்திமுதல் வாத்தியங்கள் சேர்ந்ததிர-வித்வசனர்
தம்புருவேய் வீணை சரமண் டலந்தொனித்துச்
சம்பிரம சங்கீதந்; தாமிசைப்ப-விம்பச்
சசிநேர் குடைநிழற்றச் சாமரைகள் வீச
நிசியோட்டு தீவர்த்தி நீட்டச்-சுசியான
பாடல்கள் 111- 120
பன்னீர் சிவிறப் பரிமளமெங் குங்கமழ
நன்னீர்மை யாலத்தி நாட்டமிடச்-சொன்னீர்மை
ஆசிமறை யோர்புகல ஆரவமுண் டாக்கியிடக்
காசின்மணித் தீபங் கவின்நிரைப்பப்-பேசுபுகழ்ப்
பாண்டி மழவன் பழையவழி யின்வழியே
பூண்டநுதற் பட்டம் புனைந்தருள்-வாண்டிருந்து
பூதானம் பொற்றானம் போற்றுகன்னி காதானம்
மாதானம் அன்னம் அருள்தானம்-கோதானம்
யாவும் மகிழ்ந்துகொடுத் தாரெழிலி;சேர் பேரொளிகள்
தாவுமணி மண்டபத்திற் சார்ந்திருந்து-மேவுமருள்
தேன்போல் மொழிபாகர்ச் சிந்தைசெய்து வந்தனையாய்
ஆன்பால் பழமும் அருந்தியின்-தான்பாரப்
பொற்கலத்தில் இட்டபசும் புத்தமுதம் என்னநின்ற
நற்கறிபால் சீனி நறுநெய்யும்-அற்புதமாய்
ஆனரச மாக்கதலி ஆர்வருக்கைத் தீங்கனிநல்
தேன்மிகுத்த திவ்யமுள தீஞ்சுவையோ(டு) - ஆன(து)
அருந்திப் பசியாறி அஞ்சுசுத்தி செய்து
திருந்துமணிப் பந்தரின்கீழச் சென்று - பொருந்தியசீர்
மேல்அம் பரத்தரசன் மேவும்அயி ராவதத்தின்
கோலம் பொருந்துமத குஞ்சரத்தை - ஞாலம்
பாடல்கள் 121- 130
புகழக் கொணர்ந்தமைத்த பூஷணங்க ளெல்லாந்
திகழச் சமைத்துத் திருத்தி - மகிழ்வுபெறச்
சீமான் செயவீரன் சித்தசன்நே ரொத்தமன்னன்
கோமா னெனுஞ்சிங்கை யாரியர்கோ - னாமான்மெய்த்
துங்கக் களிற்றில் துலங்கமகிழ்ந் தேறுதலும்
மங்கலஞ்சேர் பல்லியங்கள் மற்றதிர - அங்குமுறு
தந்திரமோர் நான்குஞ் சகலவிர துஞ்சூழ
இந்த்ரபத வீதியென ஏற்றமிஞ்ச - மைந்துபொலி
வங்கங் குலுங்க மலாடங் கிடுகிடென்னக்
கொங்கங் கலங்கிக் குடிவாங்க - வங்கம்
பயந்துநெரிந் தேங்கிப் பதைபதைக்க யானை
நயந்தபதம் வாங்கி நடந்து - வியந்ததெரு
வீதியினில் ஏகநகர் மேவுசனர் யாவர்களும்
நீதிமன்னர் யாரும் நெறிக்கொண்டே - ஆதிதொட்டு
இந்நாள் வரைக்கும்நம்பால் எய்துதுயர் எங்காசசோ
மன்னான உனைக்கண்ட மாத்திரத்தே - இன்னேதான்
ஈடேறி னோம்மிகவும் இன்பமுற்றோம் எவ்வறுமை
காடேறி யோடக் கரைகண்டோம் - தோடேறு
மாலையணி மார்பா வயவீமா வாளபிமா
மாலைநிகர் மன்னான வருகவென்பார் - வேலையென்னக்
பாடல்கள் 131- 140
கோத்தபெருஞ் சேனைக் குலவேந்தா எம்முகத்தைப்
பார்த்தருளாய் எங்கே பராக்கென்பார் - கீர்த்தியுடன்
முட்டுவார் போல முடுகுவார் நாலுதிக்குங்
கிட்டுவார் நல்வசனங் கேட்டிடுவார் - சட்டமுடன்
பாடுவார் வாசப் பரிமளங்கள் வீசுவார்
ஆடுவார் ஆர்களிகொண் டார்த்தெழுவார் - சூடுமதிக்
கங்காள நாதன் கறைக்கண்டன் மாதுமையோர்
பங்காளன் தன்திருக்கண் பார்வையினால் - மங்காமல்
ஆண்டிலொரு நூறும் அழியாமை இப்பதியை
ஆண்டுமிக வாழ்வாய் அரசவென - ஈண்டி
மலர்மாரி தூவி வருவார்கள் யாரும்
பலகாலும் பாதம் பணிய - நலமான
மங்கையர் சூழ் மன்னன் வரவறிந்து வாய்ந்தகுடக்
கொங்கை குலுங்கக் சூழல்சரியச்-செங்கைவளை
ஆர்ப்பச் சிலம்புகொஞ்சு அம்புலியைப் போல்வதனம்
வேர் க்கவிரைந் தோடிமணி வீதிவந்து-பார்க்கிலிவன்
விண்ணவனோ ஆதி விரிஞ்சனோ செங்கமலக்
கண்ணானோ பேரளகைக் காவலனோ-மண்ணரசாள்
வேந்தர்களின் முன்னாம் விசயனோ வீடுமனோ
ஆய்ந்த ரகுகுலஞ்சேர் ஆரியனோ-போந்தவன்றன்
பாடல்கள் 141- 150
சந்தமணி மார்பழுந்தச் சாரா திருந்தனமேல்
இந்தமுலை யென்னோ வெழுந்ததென்பர்-மந்திரமாய்
நாமொருதூ தேவி நயந்தியவனை மேவியின்பக்
காமரசம் உண்போம் கலக்கமென்பார்-பூமியில்யாம்
கொண்டவிர கந்தீரக் கொங்கையினில் இங்கிவன்கை
முண்டகந்தொட் டால்அதுவே மோட்சமென்பார்-வண்டு
செறிந்ததொடை யான்இவனைக் சேராமல் யாமும்
இறந்ததினால் என்னபய னென்பார்-நிறந்திகழ
இப்பிறப்பில் இங்கிவனைச் சேராமல் யாமிறந்தால்
எப்பிறப்பில் துய்பபோம்இவ் வின்பமென்பார்-இப்படியே
பேதையர்முன் னாய்எழில்சேர் பேரிளம்பெண் ஈறாகக்
காதலிடை மூழ்கிவிடக் காவலனும் - போத
நகரி வலம்வந்து நானிலமும் போற்றப்
புகலுமணி மாளிகையிற் போந்த-இகலரிமாத்
தாங்குமணி ஆசனத்தில் தண்ணிளியும் மெய்ந்நலனும்
ஒங்கநனி வீற்றிருந்தங்(கு) உன்னித் - தேங்கமழும்
புண்டரிக மார்பன் புகலுமது ராபுரியோன்
எண்டிசையும் ஏத்தும் இராசமந்தரி - கொண்டதொரு
வேதக் கொடியன் விருதுபல பெற்றதுரை
கீதப் பிரவுடிகன் கிர்பையுள்ளான - தீதற்ற
பாடல்கள் 151- 160
புந்தியுள்ளான் மேன்மையுள்ளான் புண்ணியமுள்ளான் புவியோர்
வந்திறைஞ்சும் பாத மகிமையுள்ளான் - முந்(து) அரிபால்
தோன்றி அகிலாண்ட கோடியெல்லாந் தோற்றமுற
ஈன்றோன் குலத்தில் எழுகுலத்தான் - சான்றோன்
புவனேக வாகுவென்னும் போரமைச்சன் தன்னை
நவமேவு நல்லூரில் நண்ணுவித்துச் - சிவநேச
ஆகத்தான் தோன்றும் அனிசத்தான் அன்னமருள்
தாகத்தான் விஞ்சுந் தருமத்தான்-சோகந்தீர்
பாகீ ரதிகுலத்தான் பைம்பொன்மே ழித்துவசன்
பாகாரும் வேங்கைப் பருப்பதத்தான் -வாகாருங்
கார்காத்து விட்டதென்னக் காமுறுபொன் பற்றியென்னும்
ஊர்காத்து விட்டுவந்த உச்சிதவான் - பேர்சாற்றில்
வாசவன்நேர் பாண்டி மழவனையுந் தம்பியையும்
நேசமுறு மைத்துனமை நேர்ந்ததுரை - பேசுபுகழ்ச்
சண்பகப்பேர் வாய்ந்த திறன்மழவ னோடும்அவன்
நண்புபெறு தம்பியையும் நானிலத்திற்-பண்புசெறி
தக்க பலவளமுஞ் சார்ந்துகல்வி நாகரிகம்
மிக்கதிரு நெல்வேலி மேவுவித்துத்-தக்கவர்கள்
எல்லாரு மேத்தும் இரவிகுல மன்னவனார்
சொல்லும் பெயர்புனைந்த சுத்தபர-நல்லபுகழ்
பாடல்கள் 161- 170
சூழுங்கங் காகுலத்துத் துய்யதுளு வக்கூட்டம்
வாழும் படிக்குவந்த மாசின்மணி-ஏழுகடல்
சுற்றுபுவி முற்றுந் துதிக்குஞ் சுகபோசன்
கற்றவருக் கீயுங் கனகதரு-வெற்றிதரு
காவிமலர் மார்பன் கருதும்வெள் ளாமரசன்
மேவுகலை ஞான வினோததுரை-காவிரியூhச்
செய்ய நரசிங்க தேவனைநற் சீர்வளங்கள்
வைகுமயி லிட்டிதனில் வாழவைத்து-வையகத்து
முத்தமிழ்சேர் சித்தன் முகசீ தளவசனன்
சித்தச ரூபன்மன் திருச்சமுகன் - மெத்தியசீர்
வாலிநகர் வாசன் மருள்செறிவெள் ளாமரசன்
கோலமிகு மேழிக் கொடியாளன் - மூலமிகு
செண்பகமாப் பாணனையுஞ் சேர்ந்தகுலத் தில்வந்த
தண்குவளைத் தார்ச்சந்த்ர சேகரனாம் - பண்புடைய
மாப்பாண பூபனையும் மாசில்புகழ்க் காயல்நகர்ப்
பூப்பாணன் என்னவந்த பொன்வசியன் - கோப்பான
சீரகத்தார் மார்பன் செறிகனக ராயனையும்
பாரகத்துள் மேன்மை பலவுடைத்தாய் - நீரகத்தாய்த்
தொல்லுலகோர் நாளுந் தொகுத்துப் பிரித்துரைக்குந்
தெல்லிப் பழையில் திகழவைத்து - நல்விருதாய்க்
பாடல்கள் 171- 180
கோட்டுமே ழித்துவசன் கோவற் பதிவாசன்
சூட்டு மலர்க்காவித் தொடைவாசன் - நாட்டமுறும்
ஆதிக்க வேளாளன் ஆயுங் கலையனைத்துஞ்
சாதிக்க ரூப சவுந்தரியன் - ஆதித்தன்
ஓரா யிரங்கதிரோ(டு) ஒத்தவொளிப் பொற்பணியோன்
பேரா யிரவனெனும் பேரரசைச் - சீராருங்
கன்னல் செறிவாழை கமுகுபுடை சூழ்கழனி
துன்னும் இணுவில் துலங்கவைத்துப்-பொன்னுலகிற்
கற்பகநேர் கைத்தலத்தான் கச்சூர் வளம்பதியான்
மற்பொலியுந் தோட்குவளை மாலையினான்-பொற்பார்
நதிகுலவெள் ளாமரசன் நானிலத்தின் மேன்மை
அதிகபுகழ் பெற்ற அழ காளன்-நிதிபதிபோல்
மன்னன்நிக ரான்மன்னன் மாமுத் திரைகள்பெற்ற
தன்னிகரில் லாதவிறல் தாட்டிகவான்-இந்நிலத்தில்
ஆலமுண்ட கண்டன் அடியைமற வாதவள்ளல்
நீலகண்ட லென்னும் நிருபனையும்-மேலுமவன்
தம்பியரோர் நால்வரையுந் தான்பச் சிலைப்பளியில்
உம்பர்தரு வென்ன உகந்துவைத்துச்-செம்பதும்
மாதுவள ருஞ்சிகரி மாநகர்வெள் ளாமரசன்
சாதுரியன் காவிமலர்த் தாரழகன் - ஓதுமொழி
பாடல்கள் 181- 190
உண்மையுள்ளான் மேலும் யுகப்புள்ளான் ஊக்கமுள்ளான்
வண்மையுள்ளான் மேலும் வளமையுள்ளான் - திண்மைபெறு
மாரன் கனக மழவனைப்பின் நால்வருடன்
சேரும் புலோலி திகழவைத்துப் - பேரளகைக்
காவலன்நேர் செல்வன்மலர்க் காவியணி யும்புயத்தான்
பாவலருக் கின்பப் பசுமேகம் - பூவில்வரு
கங்கா குலத்துங்கன் கவின்பெறுமே ழிக்கொடியோன்
மங்காமல் வைத்த மணிவிளக்குச் - சிங்கார
கூபகநா டாளன் குணராசன் நற்சமுகன்
கூபகா ரேந்த்ரக் குரிசிலையுஞ் - சோபமுற
நண்ணக் குலத்தின் நரங்குதே வப்பெயர்சேர்
புண்ய மகிபால பூபனையும் - மண்ணினிடைப்
பல்புரத்தின் நல்வளமு மொவ்வாப் பலவளஞ்சேர்
தொல்புரத்தின் மேன்மை துலங்கவைத்து - வில்லில்
விசயன்போர் வீமனுயர் வீறுகொடைக் கன்னன்
இசையிற் பொறையில் இயல்தருமன் - வசையற்ற
புல்லூர்த் தலைவன் புகழ்செறிவெள் ளாமரசன்
எல்லோர்க்கும் மேலாம் இரத்னமுடிச் - செல்வமுறு
தேவரா சேந்த்ரனெனுஞ் செம்மல்தனை - இந் நிலத்திற்
கோவிலாக் கண்டி குறித்துவைத்து - நாவிரியும்
பாடல்கள் 191- 200
சீர்த்தியுறு செம்மல் செழுந்தொண்டை நாட்டரசன்
கோத்தமணப் பூந்தார்க் குவளையினான் - ஆர்த்தகவிக்
கம்ப னுரைத்த கவியோ ரெழுபதுக்குஞ்
செம்பொன்(ன்)அபி சேகஞ் செயுங்குலத்தான் - பைம்புயல்நேர்
மண்ணாடு கொண்ட முதலியயெனும் மன்னவனை
உள்நாட் டிருபாலை ஊரில்வைத்து - விண்ணாட்(டு)
இறைவனிகர் செல்வன் எழில்செறிசே யூரன்
நிறைபொறுமை நீதியக லாதான் - நறைகமழும்
பூங்காவி மார்பன் புகழுளவெள் ளாமரசன்
நீங்காத கீர்த்தி நிலையாளன் - பாங்காய்
இனியொருவர் ஒவ்வா இருகுலமுந் துய்யன்
தனிநா யகனெனும்போர் தாங்கு - முனியவனை
மற்றுமுள பற்று நகர்வளமை சூழ்ந்திடுதென்
பற்று நெடுந்தீவு பரிக்கவைத்துச் - சுற்றுபுகழ்
வில்லவன்தன் வஞ்சி நகருறைவெள் ளாமரசன்
பல்லவனோ டிரண்டு பார்த்திவரை - நல்விளைவு
தாவுங் களனிகளுஞ் சாற்றும் பலவளமும்
மேவுவெளி நாட்டில் விளங்கவைத்துப் - பூவில்
தலையாரி சேவகரில் தக்கவர்கள் தம்மை
நிலையாக நாட்ட நினைத்துச் - சிலைதரித்த
பாடல்கள் 201- 210
வல்லியமா தாக்கனென்னு மரசூர வீரினைச்
சொல்லியமேற் பற்றுத் துலங்கவைத்து - நல்ல
இமையாண மாதாக்க னென்னும் இகலோனை
அமைவாம் வடபற்றி லாக்கி - இமயமறி
செண்பகமா தாக்கனெனுஞ் சீர்விறலோன் தன்னையிரு
கண்போலக் கீழ்ப்பற்றைக் காக்கவைத்து - ஒண்பயிலும்
வெற்றிமா தாக்கனெனும் வெய்யதிற லோனைமிக
உற்றிடுதென் பற்றி லுகந்துவைத்துச் - செற்றவரை
வென்ற படைவீர சிங்கனெனும் வீரியனைத்
தன்திருச்சே னைக்குத் தலைமைசெய்து - துன்றிவரும்
ஆனை குதிரை யமரு மிடங்கடல்போற்
சேனை மனிதர் செறியிடமோ(டு) - ஆனவெல்லாம்
அங்கங்கே சேர்வித் தருள்தார காகணத்துள்
திங்க ளிருந்தரசு செய்வதுபோல் - துங்கமுறு
பூபாலர் வேந்தன் புதியநக ராதிபதி
சாபாலங் காரந் தருராமன் - மாபா
ரதமாற்று மாயவன்போ லெய்துபகை மாற்றும்
மிதமாய்ந்த வீரர் விநோதன் - பதுமமலர்ப்
புங்கவனைப் போலப் புவிதிருத்தி யாண்டுவைத்த
சங்கச் சமூகத் தமிழாழன் - பொங்குந்
பாடல்கள் 211- 220
தரைராசன் அம்புவியைத் தாங்குமகா ராசன்
துரைராசன் தூயபுவி ராசன் - வரமார்
செயசிங்க ஆரியனாம் செய்யகுல ராசன்
நயந்துபுவி ஆண்டிருக்கு நாளில் - வியந்த
மதுரைநகர்ச் சொக்கர் மலர்ப்பாதம் போற்றி
இதயத் திரவுபக லெய்தி - விதனமுறும்
அக்கவின்சேர் கோவி லமைத்துப்ர திட்டைசெய்து
சொக்கலிங்க மென்றுபெயர் சூட்டுமென்ன - மிக்க
மனநினைவின் மன்னன் மதித்துமஞ்ச மீதிற்
புனைதுயிலாய் மேவியிடும் போது - புனிதமிகு
மாயனுக்கும் வேதனுக்கும் மாமறைக்கும் எட்டாத
தூயபெரு ஞானச் சுடர்ப்பிழம்பு - காய்கதிரோ(டு)
ஒத்ததிரு மேனி உருவமொழித் துப்புவியில்
வைத்த மனிதர் வடிவாகிச் - சித்ரமிகு
காதிற் கடுக்கனிட்டுக் கைக்கங் கணமணிந்து
சோதித் திருவலயந் தோளிலிட்டுப் - பாதத்தில்
வீரக் கழலணிந்து மிக்கசெம்பொற் பட்டுடுத்துச்
சாரு மகுடந் தலையிலிட்டுப் - பாரச்
சகல பணியுமிட்டுத் தன்மனையென் றோர்பெண்
புகலுஞ் சருவாங்க பூஷணியாய் - மிகவெழில்சேர்
பாடல்கள் 221- 230
வம்பார் குழுலியொடு மல்குகன வின்கண்நின்று
நம்பேர் கயிலாய நாதனென்ன - நம்பி
விழித்தெழுந்து மன்னன் விடையேறு நாதன்
ஒளித்துநின்(று)ஆட் கொண்டானென்(று) உன்னிக்-களித்துமனப்
பூரணம தாகிப் புனிதா லயமியற்றக்
காரணமாய் நன்முகூர்த்தங் காட்டுவித்து - ஆரணத்திற்
சொன்னமுறை தப்பாமற் சுற்றிச் சுவரியற்றி
மன்னுசபை மூன்றும் வகுத்தமைத்து - உன்னி
அதிசயிப்ப ஈசனுறை ஆலயமாற் றிப்பார்ப்
பதிகோவில் பாங்கருறப் பண்ணி - விதியாற்
பரிவார தேவர் பதியாக சாலை
உரிதாம் இடங்களில் டாக்கி - அரிதான
உக்ராண வீடு(ம்)அமைத் தோதுதிரு மஞ்சனத்து
மிக்கதிரு வாலியுடன் வெட்டுவித்து - முக்யமுறு
மாமறையோர் வாழு மணிஆல யங்கள்செய்து
ஓமமுறை செய்யுமிடம் உண்டாக்கிச் - சாமநிதம்
ஓதுவிக்கும் ஆலயம்செய் துண்டுபசி தீர்த்துவைக
ஒதனத்தா னப்பதியும் உண்டாக்கிச் - சோதியுறை
தேரோடும் வீதி திருத்திமட மும்சமைத்துக்
காரோடும் பொங்கர்களும் காரணித்துச் - சீரான
பாடல்கள் 231- 240
செம்பதும ஓடைகளும் செய்யமணி மேடைகளும்
உம்பர்பதி என்னமகிழ்ந்(து) உண்டாக்கி - அம்புவியுட்
கேதாரந் தன்னிற் கிளர்மதன்அர்ச் சித்துவைத்த
ஆதார லிங்கம் அழைத்தருளி - மீதாக
வந்தபிர திட்டை மகிழ்வோடு செய்தருள
அந்தணருள் ஆய்ந்திங்கு அனுப்புமெனச் - செந்திருவார்
சேதுபதிக்குச் செழும்பா சுரமனுப்பி
ஆதிமறை யோர்கள்புகழ் ஆசிரியன் - வேதமுணர்
கங்கா தரனெனும்பேர்க் காசிநக ரோனைஇனி(து)
இங்கே யவனனுப்ப எய்தியபின் - செங்கனிவாய்ச்
சீதை கொழுநன் திகழ்ராம நாதனைஅப்
போதுபிர திட்டை புரிந்ததுபோல் - ஓதுவன்னச்
சந்தனக்கால் நாட்டிச் சலாகைநிரைத் துப்பரவிச்
சுந்தரப்பொற் பந்தல் துலங்கவிட்டு - அந்தரத்தில்
ஆடுகொடி கட்டி அதுமுதலாய் செய்தமைத்து
நீடு விதானம் நிறைவேற்றிக் - கோடிவன்னக்
கச்சால் அலங்கரித்துக் கற்றைமுத்தின் குச்சணிந்து
பச்சைகறுப் புச்சிவப்புப் பத்தியிட்டு - இச்சையுடன்
துப்புக் குவைபிணித்துச் சுத்திதனக் கொத்திசைத்துக்
குப்பைக் கனகக் குசைபரப்பி - ஒப்பமுறப்
பாடல்கள் 241- 250
பாக்குக் குலைகதலிப் பைங்குலைதா ழங்குலையுந்
தூக்கியணிந் தெங்குந் துலங்கவிட்டு - வீக்குஞ்
சிலைபோல் வலயமிட்டுச் சித்திரங்க ளாகக்
கலையாற் குடம்பரப்பிக் கட்டி - நிலையான
கன்னலொடு பச்சைக் கமுகுகத லித்தொகைகள்
துன்னுமணி வீதியிட்டுத் தோரணித்துப் - பொன்நகர்போற்
சோடித்த தன்பின்எயில் சூழ்ந்தமணி ஆலயத்தை
நாடுற்ற சந்தனத்தி னால்மெழுகி - நீடுமொளி
மாணிக்கம் நீலக் வைடூ ரியம்வயிரம்
ஆணித் தரளத்(து) அமைத்தழுத்திப் - பாணித்துப்
பத்துத் திசையும் பரந்துதயங் குங்கிரண
சித்ரமுறு சிங்கா சனம்திருத்தி - வைத்தபின்பு
மாசின்மறை யோர்குரவன் மஞ்சனமா டித்திரும்பிப்
பேசுரட்சா பந்தனமும் பேணியிட்டு - ஓசைவிடை
கோட்டித் திசைகளெட்டுங் கொண்டசுத்த தண்டிலத்தை
போட்டுக் கமலதளம் போற்பரப்பி - நாட்டமிட்டுப்
பஞ்சவன்னந் தூவியிட்டுப் பச்சைக் குசைபரப்பி
விஞ்சுபொற் கும்பகல மீதுவைத்து - அஞ்சலியாய்க்
கோலமலர் தூவிக் குளிர்ந்த செம்பொற் பட்டுடுத்திப்
பாலிகைகள் சுற்றிப் பரப்பிவைத்து - மூலபரன்
பாடல்கள் 251- 260
ஆகமத்தால் அவ்வகை ஆகஅமைத் துச்சந்த்ர
சேகரனை ஆகமத்திற் சேர்த்துவைத்துப் - பாகமுற
முப்பத் திரண்டறமும் முற்றவளர்த் திட்டவருட்
செப்புற்ற சொர்க்கச் சிவையைவைத்தே - ஒப்பற்ற
ஆபரண வாசி அழகுறுபொற் பட்டுடைகள்
சோபனம தாகத் துலங்கணிந்து - தூபமிட்டுச்
சாதிகர வீரமொடு சண்பகஞ்செங் காந்தள்பிச்சி
சீத வனசம் திருக்கடுக்கை - ஆதியவாம்
மாமலர்கள் வாரி மலர்ப்பதத்தின் மீச்சொரிந்து
தாமவட மும்துலங்கச் சாத்தியிட்டுத் - தூய்மையுறு
சம்பா அடிசில் சகலவித மாச்சமைத்து
விம்பவட மேருவென்ன வேகுவித்துச் - சம்பிரமாய்
மாங்கனியோ(டு) ஆரும் வருக்கைக் கனிகதலித்
தீங்கனியும் மந்தரம்போற் சேர்த்துவைத்துப் - பாங்கரினிற்
பச்சிளநீர் நெய்தேன் பலகாரம் பால்முதலா
உச்சிதம தாக உவந்துவைத்து - வச்ரமணி
அள்ளி அழுத்தி அழகுறுகா ளாஞ்சிதனில்
வெள்ளிலையும் பாகும் விளங்கவைத்துத் - தௌ;ளியசீர்த்
தாமத் தரளத் தவளக் குடைநிழற்றக்
காமருறும் ஆலவட்டங் கைப்பிடிக்கச் - சேமமடற்
பாடல்கள் 261- 270
சல்லரி பொற்பேரி தவில்முரசு தண்ணுமைமற்
றெல்லா முரசு மெழுந்தொலிப்பச் - சொல்லரிய
மங்களங்க ளார்ப்ப வனிதையர்பல் லாண்டிசைப்பப்
பொங்குங் கவரி புடையிரட்டப் - பங்கமுடன்
நாடகத்தின் மாதர் நடிக்கத் தொனியெழும்பச்
சோடசபூ சாவிதங்கள் தோற்றமிட்டு - ஆடு
மயில்போல் உமாபதிக்கு வாய்த்த திருநாமங்
கயிலாய நாதனெனக் காட்டி - வெயிலிமைக்குஞ்
செக்கர்த் திருவுருவிற் சீரபிடேகம் புரிய
அக்கினியின் ஓமகன்மம் ஆற்றியபின் - பக்கமுறு
கும்பமுறு மஞ்சனத்தைக் கொண்டமலர்க் கையினெடுத்(து)
அம்பொன்மணி மேனியினில் ஆக்குதலும் - உம்பருக்குந்
தூயமுனி வோர்க்கும் துறவியர்க்கும் எட்டாத
மாயமல கன்மற்ற மாசில்பரன் - வாய்மையிடில்
வாக்கு மனவிகற்ப மாமறைக்கும் எட்டாமற்
போக்குவரத் தில்லாப் புனிதபரன் - நோக்கியிடிற்
புண்டரிகத் தோற்கும் புருடோத் தமற்குமெட்டா
அண்டரண்டம் எங்கும்நிறை ஆதிபரன் - கொண்டமைந்த
ஒத்த அருவுருவாய் ஒப்புவமை ஒன்றுமில்லாச்
சுத்தசித்த சந்தான சூட்சபரன் - சித்தமுற
பாடல்கள் 271- 280
ஆதிநாடு ஈறும் அடிமுடியும் நாடரிதாய்ச்
சோதிமய மாகிநின்ற சுத்தபரன் - நீதியினிற்
சேருந் திரிபுரமும் தீப்படுத்தச் சிந்தைசெய்து
மேருச் சிலைவளைத்த வீரபரன் - பாரமுறும்
ஓங்காரத் துள்ளொளியாய் உற்றதொகை அட்சரத்து
நீங்காம லேநிறைந்த நித்தபரன் - வாங்காது
புக்க இருவனையாய்ப் போதமுமாய் உட்பொருளாய்த்
துக்கசுகம் இல்லாத தூயபரன் - அக்கினியாய்
மண்ணாய்ப் பரந்துலவு மாருதமாய் வார்புனலாய்;
விண்ணாகி நின்ற விமலபரன் - எண்ணுகின்ற
ஒன்றாய்ப் பலவாய் உள்ளதுமாய் இல்லதுமாய்
நன்றுதீ தற்றிருக்கும் ஞானபரன் - அன்றியுமே
தோன்றுபதி னாலுலகில் தோற்றுமுயிர் வர்க்கமெலாம்
ஈன்றவளை வாமத் திருத்துபரன் - ஊன்றுமனப்
பத்தியுள் ளோர்கட்குப் பரவரிய சாயுச்ய
முத்திகொடுக் குங்கருணை மூர்த்தபரன் - சித்தசன்முன்
கூறுமலர் அம்புதொடக் கோலநுதல் தீவிழியால்
நீறுபட அன்றெரித்த நித்தபரன் - பூருவத்தில்
தந்தி முகவனையும் தம்பிமுரு கேசனையும்
மைந்தரெனத் தந்தருளும் மாயபரன் - சுந்தரன்தன்
பாடல்கள் 281- 290
தூதாய்ப் பரவையெனுந் தோகையிடத் தேஇரவின்
மீதே நடந்த விமலபரன் - பாதமலர்
சன்றச்சிலம்பு கொஞ்சக் கங்கைஉட லம்பதற
மன்றுள்நட மாடும் வரதபரன் - என்றுமுள
போதசிவ ஞான புராணமய மாய்முதிய
வேதவடி வாகி விளங்குபரன் - ஓதுமுறை
கைதொழுவோர் தங்கள் கருத்தொருமை - ஓர்ந்துருகு
மெய்யுருவாய் நின்று விளங்குபரன் - வையகத்திற்
சிந்தித்(து) ஒருகால் சிவாவென் றுரைக்கி(ல்) அதற்(கு)
அந்தரமாய் நின்றங்(கு) அருள்செய்பரன் - மந்தரத்தைப்
பாற்கடலி லேகடையப் பண்பொடெழுந்(து) அண்டரஞ்ச
ஆர்க்குமுழு நஞ்சையுண்ட வாதிபரன் - போர்க்கெழுந்த
மத்தகெசம் உட்கி மறுகிவரத் தோலையுரித்(து)
உத்தரிய மாக உவந்தபரன் - அத்தனார்
இந்தவித மெல்லாம் இதயத் துணர்ந்தருளி
நந்தி திருமூகத்தில் நாட்டமிட்டு - நந்தமிர்தச்
சித்திரகை லாசமொடு தென்கயிலை இவ்விரண்டு
நித்தமுளம் ஓர்ந்துறையும் நேயபத்தி - அத்துடனே
முக்கைலை யாகநல்லை மூதூரின் நன்றமைந்த(து)
அக்கைலை மீதின் அமர்
venuavs
venuavs
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 4
புள்ளிகள் : 8
Reputation : 0
சேர்ந்தது : 29/11/2011
வசிப்பிடம் : Coimbatore

Back to top Go down

கைலாயமாலை  (எழுதியவர்: முத்துராச கவிராசர் ) Empty Re: கைலாயமாலை (எழுதியவர்: முத்துராச கவிராசர் )

Post by மகி Wed Nov 30, 2011 9:59 am

பகிர்வுக்கு நன்றி ஐயா.
மகி
மகி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 5854
புள்ளிகள் : 9651
Reputation : 94
சேர்ந்தது : 09/08/2009

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum