தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.

Join the forum, it's quick and easy

தமிழ் | Tamil | Forum
தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கூடுதல் தகவலினை பெற உள்நுழையவும் அல்லது பதிவு செய்யவும்.

புகைப்படங்கள், காண்பொளிகள், விளையாட்டுகள் மற்றும் உறுப்பினர்கள் பகுதிகளைக் காண உள் நுழைய வேண்டும்.
தமிழ் | Tamil | Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் என் பெயர் நாகராசன்.இரா
by rajan_1972 Fri Apr 10, 2020 7:20 pm

» சிறந்த பொழுதுபோக்கு இணையதளம்!
by pba Sat Jul 02, 2016 8:11 pm

» ஏற்றுமதி உரிமம் பெறும் விண்ணப்பம்
by tamilnews Tue Mar 24, 2015 8:00 pm

» மொபைல், டிடிஎச் ரீசார்ஜ் செய்யப் போறீங்களா? இந்த சலுகைகளைப் பாருங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:41 am

» மொபைல் ரீசார்ஜ் செய்து ஷாப்பிங் கூப்பன் இலவசமாக பெறுங்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:38 am

» மெமரி கார்டு வாங்கப் போறீங்களா? 74% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:36 am

» அமேசானில் பெண்களுக்கான ஆடைகள் 70% வரை தள்ளுபடி !
by dsytamil Wed Jan 14, 2015 1:34 am

» அமேசானில் ஆண்களுக்கான ஆடைகள் 60% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:31 am

» லெனோவா டேப்ளட் 43% சலுகை விலையில் ரூ. 5949 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:28 am

» ப்ளிப்கார்ட் தளத்தில் சிறுவர்களுக்கான ஆடைகள் 70% வரை + 30% கூடுதல் தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:14 am

» அமேசான் தளத்தில் 50% தள்ளுபடி விலையில் மொபைல்கள்!
by dsytamil Wed Jan 14, 2015 1:13 am

» ரூ. 7499 மதிப்புள்ள மைக்ரோமேக்ஸ் ஏ1 ஆன்ட்ராய்டு மொபைல் இப்போது ரூ. 5499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:11 am

» ரூ. 19999 மதிப்புள்ள நோக்கியா லூமியா 625 மொபைல் ரூ. 7499 மட்டுமே!
by dsytamil Wed Jan 14, 2015 1:10 am

» ப்ராண்டட் காலணிகளுக்கு 70% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:08 am

» ஆன்லைன் ஷாப்பிங்கில் ப்ரிண்டர்களுக்கு 33% வரை தள்ளுபடி!
by dsytamil Wed Jan 14, 2015 1:06 am

» ஆன்லைனில் பொருள் வாங்கப் போறீங்களா? 70% வரை பணத்தை சேமியுங்கள்!
by dsytamil Tue Jan 13, 2015 12:30 am

» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...!
by sathikdm Sun Oct 19, 2014 4:45 pm

» சிறுதொழில் செய்பவர்கள் இணையதளம் தொடங்க வேண்டியதின் அவசியம்!
by pba Sat Sep 27, 2014 12:58 am

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:47 pm

» THAMILAN PIRAPPAN
by K.VAMADEVAN Mon Sep 08, 2014 8:42 pm

» நகைச்சுவை சூறாவளி சூரிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
by santhoshpart Wed Aug 27, 2014 4:22 pm

» “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா!”
by santhoshpart Wed Aug 13, 2014 3:54 pm

» Daily Rs.500/- and Above
by K.MARIAPPAN Wed Jul 30, 2014 12:01 pm

» http://www.neobux.com/?r=narasimmant
by Navaneethakrishnan Wed Jul 02, 2014 3:41 pm

» வணக்கம் என் பெயர் வேணு
by A.Venu Fri Jun 27, 2014 10:10 am

» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி?
by sathikdm Wed Jun 18, 2014 3:24 pm

» தமிழ் மொழி மூல கல்வி இணையதளம்
by afdhaal Wed May 28, 2014 9:22 pm

» வருக. வருக. வணக்கம்.
by மகி Mon May 12, 2014 3:55 pm

» அறிமுகம் -விநாயகா செந்தில்.
by மகி Mon May 12, 2014 3:53 pm

» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....!
by vinayagasenthil Sat May 10, 2014 9:04 pm

பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

ரயில் சிநேகம்!!!

Go down

ரயில் சிநேகம்!!! Empty ரயில் சிநேகம்!!!

Post by pondy.queen Mon Jul 19, 2010 12:50 pm

ரயில் சிநேகம்!!!

'பயணிகள் கவனத்திற்கு... லால்குடி அரியலூர் மார்க்கமாக விழுப்புரம் வரை செல்லும் திருச்சி விழுப்புரம் பாஸஞ்சர் இன்னும் சற்று நேரத்தில் நான்காவது பிளாட்பாரத்திலிருந்து புறப்பட இருக்கிறது'

மைக்கில் அழகிய தேன் தடவிய குரலில் அறிவிப்பாளர் குரல் ஒலித்துக் கொண்டிருந்த நேரத்தில் பிளாட்பாரத்தை அடைந்தான் ரஞ்சன்.

யாரேனும் தன்னை நோட்டம் விடுகிறார்களா எனக் கவனித்துக்கொண்டே தான் எதிர்பார்த்த ஆள் அவனுடைய புடை சூழ வண்டியில் ஏறுகிறானா என்பதையும் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்த கோஷ்டியும் வண்டியில் ஏறியது. அவனும் ஏறினான்.

வண்டி கிளம்பியது. ரஞ்சன் மற்றும் அவன் தோழர்களின் பயணம் எப்போதும் இருட்டில்தான். ஆனால் இம்முறை முக்கிய பழிவாங்கும் அலுவல் காரணமாக பகலில் பிரயாணம் செய்ய நேரிட்டுவிட்டது. சுற்றும் முற்றும் நோட்டமிட்டு விட்டுக் கண்களை மூடி சற்றே தன்னை ரிலாக்ஸ் செய்து கொண்டான். பாஸஞ்சர் ஆடி அசைந்து நகர்ந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் ரஞ்சன் மனக்குதிரை எக்ஸ்பிரஸ் வேகத்தில் பின்னோக்கி பயணித்தது.

ரஞ்சன், முரளியப்பன், குரு, பக்கிரி, இன்னும் சில நண்பர்கள் ஒன்று சேரக் காரணமாயிருந்தது ஒவ்வொருவருக்கும் ஒரு சம்பவம். ரஞ்சனின் சின்னம்மா ஒரு கிராமத் தலைவனால் கற்பழித்து கொல்லப்பட்டது, ஒருவனுக்கு அவன் தந்தை ஓட ஓட ஊரை விட்டு விரட்டப்பட்டது, மற்றொருவனுக்கு அவன் மனைவிக்கு ஊர் மக்களால் ஏற்பட்ட அவமானம் என்று ஒவ்வொருவரும் இந்த சமுதாயத்தில் அந்தஸ்தில் உள்ள சிலரால் பெற்ற கசப்பான அனுபவங்கள். அதுவே இவர்கள் ஒன்று சேரக் காரணமாயிருந்தது.

இம்முறை ரஞ்சன் தன் சின்னம்மாவை துவம்சம் பண்ணியவனைத் தீர்க்கவேண்டும், அப்படியே தனது கதையையும் முடித்துக் கொள்ளவேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். அவனைத் தீர்த்துக்கட்ட பல சந்தர்ப்பம் அமைந்தும் அவன் அடிவருடிகள் பலர் அவனுடன் காவலுக்கு இருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை. துணிந்து இறங்கத் தயாராக இருந்தும் தனக்கு எதாவது ஒன்று அவனது பாதுகாவலர்களால் ஏற்பட்டு விட்டால் பழிவாங்க முடியாமல் போய் விடுமே என்ற ஒரே காரணத்தால் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தான். அதனால்தான் வண்டியில் பயணிப்பவர்களுக்கு எது நேர்ந்தாலும் பரவாயில்லை, தான் நினைத்ததைச் சாதித்தே தீரவேண்டும் என்ற வெறியில் இருந்தான்.

டடக் டடக் .. டடக் ... டடக் ..... என்று வண்டி ஒரே சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் வண்டி திருச்சி டவுனை வந்தடைந்தது. ரயில் நிலையத்தில் வண்டி நின்றவுடன் அடுத்த கோச் வரை சென்று பழிதீர்க்கப்பட வேண்டியவனைப் பார்த்து நோட்டம் விட்டு வந்தான்.

சிக்னல் போட்டாகிவிட்டது. டிங் டிங் டிங் என்று மூன்று மணியோசை கேட்டது. வண்டி டவுனை விட்டு நகர்ந்தது.

‘வாழப்பழம் பச்ச வாழப்பழம்’ எனக் கூவியபடி சிக்கென்ற உடம்புடன் ஆனால் பார்க்க சுமாராக ஒரு பெண் வாழைப்பழம் விற்ற படி வந்தாள்.

"ஏம்மா இரண்டு வாழைப்பழம் கொடு" என்றான் ரஞ்சன்.

"ஏனுங்க டசனே ஐந்து ரூபாய்தான் வாங்கிக்கிங்க" என்றாள்.

சரி என்று வாங்கினான். ஆனால் அவனால் இரண்டு பழங்களுக்கு மேல் சாப்பிடமுடியவில்லை.

அதற்குள் வண்டி லால்குடியைத் தொட்டிருந்தது. வண்டி லால்குடி ஸ்டேஷனை தொட்டதுதான் தெரியும். ஐந்தாறு பேர் ஒரு கும்பலாக ஏறி ரஞ்சன் இருந்த சீட்டுக்குப் பக்கத்திலேயே வந்தமர்ந்தார்கள். வந்தவர்களில் ஒருவன் நீட்டாகத் துண்டை விரித்து வண்டி லால்குடியை விட்டு கிளம்புவதற்குள் குறட்டை விட ஆரம்பித்து விட்டான். எதிரே இருந்த கோஷ்டி சீட்டு விளையாட ஆரம்பித்து விட்டது.

அதில் ஒருவன் பழக்காரம்மாவைத் தேட, ரஞ்சன் தன்னிடம் மீதமிருந்த பழங்களை அவர்களிடம் நீட்ட அவர்களும் அதை வாங்கி சாப்பிட்ட படியே சீட்டாடத் துவங்கினர். பின்பு சற்று நேரப் பயணத்திலேயே அவர்கள் அவனுடன் கலகலவென்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். ரஞ்சனுக்கு எதிரே ஒருவன் அந்த கோஷ்டியுடன் வந்தவன் அமைதியாக திருவாசகம் படிக்க ஆரம்பித்து விட்டான்.

சில இருக்கைகள் தள்ளி ஒரு பெண்மணி "எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ யாரோ அறிவார்" என்று கீச்சுக் குரலில் பாடிக்கொண்டிருந்தார். அதற்கேற்றபடி தாளம் போட ஒரு கூட்டம் என்று உற்சாகமாக பயணத்தை அனுபவித்தபடி பயணம் செய்து கொண்டிருந்தனர். சீட்டு விளையாடிக்கொண்டிருந்த கும்பலில் ஒருவன், “சார் பாடுறாங்களே அந்த அம்மா கோர்ட்ல வேலை செய்றாங்க” என்று ரஞ்சன் எதுவும் கேட்காமலே அவனிடம் சொன்னான்.

பாடல் முடிவடையும் தருவாயில் ஒருவன் வந்து 'மேடம் இந்தப் பாட்டை பாடுங்க' என்று நேயர் விருப்பம் போல் சொல்லிவிட்டு செல்ல, அடுத்த பாடலைப் பாட ஆரம்பித்தார்.

மணியோசை கேட்டு எழுந்து நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து. . . . . . . . . . . . . . . . . . . .

அதற்குள் சீட்டு விளையாட்டு களைகட்டி ஜோராகப் போய்க் கொண்டிருந்தது

வண்டி டால்மியாபுரம் வந்திருந்தது.

லால்குடியில் திருவாசகம் படிக்க ஆரம்பித்தவன் தற்போது அமர்ந்த நிலையிலே தூங்க ஆரம்பித்தான்.

ரஞ்சன் தன் கம்பார்ட்மெண்டிலேயே ஒரு ரவுண்டு அடித்து வர கிளம்பினான். டீச்சர்,டீச்சர் என்று கூப்பிட்டு ஒரு இளவயது அழகிய பெண்ணுடன் நாலைந்து பேர் அன்றைய சமையலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். இன்னும் கொஞ்ச தூரம் நடந்தான். அங்கு சிலர் சாமான்களுக்கு மாத்திரம் என்று எழுதப்பட்டிருந்த இடத்திலும் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். ஒருவன் வண்டியின் கதவுக்கும் வாஷ் பேசினுக்கும் நடுவில் நின்று கொண்டு இவ்விடம் சிகரெட் பிடிக்கக் கூடாது என்ற அறிவிப்புக் கீழே சுவாரசியமாக தம் அடித்துக் கொண்டிருந்தான். இங்குமங்கும் பலர் எவ்வித இலக்கும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தனர். தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களை கூவிக் கூவி விற்றுக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் ஒரு பெண் வடை மற்றும் போண்டாவை சத்தம் போடாமல் விற்றுக் கொண்டிருந்தாள்.

வண்டி கல்லகம் வந்தடைந்தது.

மீண்டும் தன் பழைய இடத்திற்கு ரஞ்சன் வந்தமர்ந்தான். அவனுக்கு இந்த வண்டியில் வந்தது ஒரு புது அனுபவத்தை கொடுத்தது. பல வருடங்களாகவே தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்ததாலும், மக்களோடு ஒட்டி உறவாடி வாழாததாலும் அப்படி இருந்திருக்கலாம். ஏதேதோ நினைத்துக் கொண்டே வந்தவனுக்கு மார்பில் ஒரு விதமான வலி வந்து நெஞ்சு அடைப்பது போல் உணரத் தொடங்கினான். முதலில் அதைப் பொருட்படுத்தாமல் இருந்தாலும் நேரம் ஆக ஆக அவனால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மெல்ல அருகில் இருந்த ஒருவனிடம் அதைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கும் போது துண்டு விரித்து தூங்கிக் கொண்டிருந்தவன் எழுந்து 'என்னாச்சு சார' என்று பதட்டப்பட, அது மேலும் ரஞ்சனை பதட்டமாக்கியது. கண்கள் இருட்டுவது போல் உணர்ந்தான். அதற்குள் மற்றொருவர் அங்குமிங்கும் அலைந்து ஒரு மாத்திரையை யாரிடமோ வாங்கி வந்து இதை முதலில் நாக்குக்கு அடியில் வைத்துக் கொள்ளுங்கள் என்று ரஞ்சனிடம் கொடுக்க அவன் வைத்த சிறிது நேரத்திலேயே குணம் தெரிய ஆரம்பித்தது. முன் பின் தெரியாத தனக்குக் கஷ்டம் என்றவுடன் பதறிய கூட்டத்தைப் பார்த்தவுடன் நெகிழ்ந்து போனான். தான் ஒருவனைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக இத்தனை பேர்கள் உயிரைத் துச்சமாக நினைத்தோமே என்று நினைத்து வருந்தினான்.

அதற்குள் வண்டி சில்லக்குடி வந்திருந்தது.

"சார் வண்டியை கொஞ்சம் நிறுத்தணும்" என்று ரஞ்சன் கூற, "அட ஏன் சார் விளையாடறீங்க, ஏற்கனவே எங்களுக்கு ஆபிஸுக்கு டயமாயிடுச்சு" என்றனர் சிலர்.

"இல்ல சார் டிராக்கில் வெடி குண்டு இருக்கு. அதனால் அவசியம் நிறுத்த வேண்டும்" என்று ரஞ்சன் கூற சிலர் சிரித்தனர்.

"இல்லங்க வெடி குண்டு வச்சதே எங்க சகாதான், நான் தான் அதற்கு காரணகர்த்தா" என்று சீரியஸாகச் சொல்ல அனைவரும் கலவரமானார்கள்

வண்டியை நிறுத்தி ரஞ்சன் சரணடைந்த போதும் சுற்றியிருந்தவர்கள் தன் மீது வீசிய பரிதாபப் பார்வையில் ரஞ்சன் புதிய பிறப்பெடுத்தான்


your's
பாண்டிகுயீன்@gmail.com




pondy.queen
pondy.queen
உறுப்பினர்
உறுப்பினர்

பதிவுகள் : 8
புள்ளிகள் : 24
Reputation : 0
சேர்ந்தது : 19/07/2010
வசிப்பிடம் : pondy

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum